Latest News

April 07, 2016

மோட்டார் சைக்கிள் விவ­கா­ரத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை கட­னா­ளி­யாக்கும் முயற்சி
by admin - 0

வரிச்­ச­லுகை மூலம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்­கு­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்த அரசு இன்று ஊட­க­வி­ய­லா­ளர்­களை கட­னா­ளி­யாக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டு­வ­ரு­வ­தாக ஊவா மாகாண சபை உறுப்­பினர் ஆறு­முகம் சிவ­லிங்கம் தெரி­வித்தார்.

கடந்த வெள்­ளி­க்கி­ழமை வெலி­மடை ஹப்­புத்­தளை வீதியில் இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில் கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரி­வித்த மாகா­ண­சபை உறுப்­பினர்,

கடந்த அர­சாங்கம் ஊட­க­வி­ய­லா­ளர்­களை கௌர­விக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் மற்றும் கணினி உள்­ளிட்ட ஊடக கரு­வி­களை கொள்­வ­னவு செய்­ய­வென ஒரு இலட்சம் ரூபா­வினை இலகு கட­னா­கவும் அதன் வட்­டி­யினை வங்­கிக்கும் செலுத்தி தவி­ரவும் இரு­பது வரு­டங்­க­ளுக்கு ் ஊடகப் பணி­யாற்­று­ப­வர்­க­ளுக்கு மோட்டார் கார் கொள்­வ­ன­வுக்கு இலகு கட­னு­தவி திட்­டத்­தையும் அறி­முகம் செய்­தது. இதனை யாரும் மறைக்­கவோ, மறுக்­கவோ முடி­யாது. கடந்த பொதுத் தேர்­தலின் போது மஹிந்த ராஜபக் ஷவி­னது ஐ.ம.சு.மு. தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் போக்­கு­வ­ரத்தை இல­கு­ப­டுத்­தவும் அவர்­களின் வாழ்­வா­தா­ரத்­தினை உய­ரத்­த­வு­மென ரூபா பதி­னைந்து இலட்சம் வரை­யி­லான வரி­ச­லுகை வழங்க முன்­வந்­தமை ஊட­க­வி­ய­லா­ளர்­களை கௌர­விக்கும் நட­வ­டிக்­கை­யாகும்.

எனவே, ஐக்­கிய தேசிய முன்­னணி அரசு தேர்தல் காலங்­களில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு வரிச்­ச­லுகை மூலம் மோட்டார் சைக்கிள் வழங்­கு­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­து­விட்டு இன்று அவர்­களை வங்கிக் கட­னா­ளி­யாக்கும் வகையில் செயற்­பட்டு வரு­வது மன­வே­த­னை­ய­ளிக்­கி­றது. எனவே ஊடகவியலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அரசு செயற்பட வேண்டியது இன்றைய காலத்தின் முக்கிய தேவையாகும் என்றார்.
« PREV
NEXT »

No comments