Latest News

April 26, 2016

வடமாகாண சபை சமஷ்டி வரைபை ரணில்,கரு மற்றும் சம்பந்தனுக்கு நேரில் கையளிக்க முடிவு
by admin - 0

vivasaayi
நீண்­ட­கா­ல­மாக புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக சமஷ்டி முைற­மை யை வலி­யு­றுத்தும் வட­மா­கா­ண­ச­பையின் அர­சியல் தீர்­ வுத்­திட்ட முன்­வ­ரைபை, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய, எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் ஆகி­யோ­ரி­டத்தில் நேரில் கைய­ளிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­பி­ர­காரம் யாழ்ப்­பாணம் மரு­த­னார்­ம­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான மே தினக்­கூட்டம் இடம்­பெ­ற­வுள்­ளது. இதில் கலந்­து­கொள்­வ­தற்­காக சம்­பந்தன் எதிர்­வரும் 30ஆம் திகதி சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­திற்கு செல்­ல­வுள்ளார்.

இதன்­போதே வட­மா­கா­ண­சபை முத­ல­மைச்சர், குறித்த தீர்­வுத்­திட்ட வரைபை அவ­ரி­டத்தில் கைய­ளிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. வட­மா­கா­ண­ச­பையின் தவி­சாளர் சி.வி.கே.சிவ­ஞானம், கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண அமைச்­சர்கள், உறுப்­பி­னர்கள் உள்­ளிட்­டோரும் குறித்த வரைபை நேரில் கைய­ளிக்கும்போது பங்­கேற்­க­வுள்­ளனர்.

அத­னைத்­தொ­டர்ந்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய ஆகி­யோ­ரி­டமும் வட­மா­காண சபை முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் நேரில் தீர்­வுத்­திட்ட வரைபை கைய­ளிக்­க­வுள்ளார். நாட்­டி­லுள்ள இனங்­க­ளுக்­கி­டை­யி­லான பிரச்­சி­னைகள் உட்­பட அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வை ஏற்­ப­டுத்தும் முக­மாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும்
செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மென ஜன­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான தேசிய அர­சாங்கம் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்­தது.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 30ஆவது கூட்­டத்­தொ­ட­ரின்­போது உரை­யாற்றி வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­மென்­பதை உறு­தி­ப­டத்­தெ­ரி­வித்­தி­ருந்தார்.
இந்­நி­லையில் பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றி­ய­மைக்கும் பிரே­ரணை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­ட­தை­ய­டுத்து தற்­போது பாரா­ளு­மன்றம் அர­சியல் அமைப்பு சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக பொது­மக்­களின் கருத்­துக்­களை அறிந்­து­கொள்­வ­தற்கும் லால்­வி­ஜ­ய­நாக்க தலை­மை­யி­லான மக்கள் கரு­த­றியும் நிபு­ணர்­குழு உரு­வாக்­கப்­பட்டு நாடா­ள­விய ரீதியில் அமர்­வுகள் நடை­பெற்று பல்­வேறு கருத்­துக்­களும் யோச­னை­களும் பெறப்­பட்­டுள்­ளன.
இவ்­வா­றி­ருக்­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­தின்­போது வட­மா­காண சபை­யினால் அர­சி­யல்­தீர்வுத் திட்டம் தொடர்­பான முன்­வ­ரை­பொன்று தயா­ரித்து வழங்­கு­வ­து­தென கடந்த ஜன­வரி மாதம் 26ஆம் திகதி இடம்­பெற்ற சபை அமர்வில் ஏக­ம­ன­தான தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­தோடு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான 19 உறுப்­பி­னர்கள் கொண்ட குழுவும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது.

குறித்த குழு­வினால் தயா­ரிக்­கப்­பட்ட முன்­வ­ரை­பா­னது கடந்த 7ஆம் திகதி இடம்­பெற்ற சபை அமர்­வின்­போது சமர்ப்­பிக்­கப்­பட்­டது. சபையில் பல திருத்­தங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அவை­தொ­டர்­பாக ஆரா­யப்­பட்டு கடந்த 12ஆம் திகதி நடை­பெற்ற விசேட அமர்­வின்­போது இறு­தி­செய்­யப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­பட்­ட­போதும் தீர்வுத் திட்ட முன்­வ­ரைபு தொடர்­பான விடயம் எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

எனினும் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற வட­மா­காண சபையின் அமர்­வின்­போது அத்­தீர்வுத் திட்­டத்தின் இறுதி வரைபு முத­ல­மைச்­ச­ரினால் சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்டு திருத்­தங்­க­ளுடன் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு இறுதி செய்யப்பட்டுள்ளது. முன்வரைபை இறுதி செய்வதற்காக நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் நான்காவது கூட்டத்தொடரில் குறித்த வரைபில் சிறு திருத்தங்கள் செய்யப்பட்டு ஏகமனதாக இறுதி முன் வரைபு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி குறித்த இறுதி முன் வரைபு வெளியிடப்படவுள்ளதோடு தமிழ்த்தலமைகளிடமும், அரசாங்கத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் நேரில் கையளிக்கப்படுமென தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

« PREV
NEXT »

No comments