Latest News

April 25, 2016

வடக்கு முத­ல­மைச்­சரின் தலை­மைத்­துவம் பல­ருக்கு அச்­சு­றுத்­த­லாக உள்­ளது வட மாகாண அமைச்சர் ஐங்­க­ர­நேசன்
by admin - 0

வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வ­ரனின் நேர்­மை­யான, கண்­ணி­ய­மான, யாருக்கும் அடி­ப­ணி­யாத தலை­மைத்­துவம் பல­ருக்கு அச்­சு­றுத்­த­லாக உள்ள கார­ணத்­தா­லேயே, அவர் தொடர்பில் பல விமர்­ச­னங்கள் வெளிவர கார­ண­மாக உள்­ள­தென வட மாகாண விவ­சாய அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன் தெரி­வித்­துள்ளார்.

வவு­னியா பூந்­தோட்டம் பிர­தே­சத்தில், புதன்­கி­ழமை நடை­பெற்ற வறு­மைக்­கோட்­டிற்கு கீழ் வாழும் மக்­க­ளுக்கு வாழ்­வா­தார உத­விகள் வழங்­கி­வைக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.
இது­கு­றித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்-

வடக்கு முதல்­வரின் நேர்­மை­யான தலை­மைத்­துவம், இன்று பல­ருக்கு அச்­சு­றுத்­த­லாக இருக்­கின்­றது. குறிப்­பாக இலங்கை அர­சாங்­கத்தை பொறுத்­த­ளவில், இவ்­வா­றான ஒரு முத­ல­மைச்சர் வடக்கில் இருப்­ப­தா­னது அவர்­களை பொறுத்­த­ளவில் ஒரு தர்­ம­சங்­க­ட­மான நிலை­யா­கவே உள்­ளது. எதையும் நேருக்கு நேர் சொல்­லக்­கூ­டிய ஒரு தலை­மைத்­து­வத்தை இலங்கை அரசு விரும்­ப­வில்லை. தாங்கள் சொல்­வ­தற்கு வளைந்து நெளிந்து வணக்கம் போடும் ஒரு­வ­ரைத்தான், சர்­வ­தேச நாடு­களும் விரும்­பி­யி­ருந்­தன. மத்­திய அரசும் அத­னையே விரும்­பு­கி­றது. அவர்­க­ளது எண்­ணத்­திற்கு மாறாக முத­ல­மைச்சர் இருப்­பது, அர­சாங்­கத்­திற்கு ஒரு தர்­ம­சங்­க­ட­மான நிலை­யாக உள்­ளது. அதன் பய­னா­கத்தான் ஆதா­ர­மற்ற, நியா­ய­மற்ற குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.
நாட்டின் ஜனா­தி­பதி அபி­வி­ருத்தி, சுற்­றுச்­சூழல் மற்றும் விவ­சாயம் தொடர்­பாக, அக்­கறை கொண்­டவர் என்­பதில் மாற்­றுக்­க­ருத்து இல்லை. ஆனால் அவரால் இவற்­றை­யெல்லாம் தனித்து தீர்­மா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றதா என்­பது என்னைப் பொறுத்­த­வ­ரையில் சந்­தே­கமே. மாகா­ண­சபை என்­பது எந்­த­வி­த­மான அதி­கா­ரங்­களும் இல்­லாது இருந்­தா­லும்­கூட, எங்­க­ளு­டைய அர­சியல் பிரச்­ச­ினை­க­ளுக்கு ஒரு தீர்­வாக தரப்­பட்­டது. ஆனால், அதை ஒரு பொம்­மை­யாக வைத்து, தான் நினைத்­ததை செய்­ய­வேண்­டு­மென்­றுதான் இந்த அர­சாங்கம் விரும்­பு­கின்­றது. எங்­க­ளுக்கும் மக்­க­ளுக்கும் இடையில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தி, இந்த மக்­களைக் கொண்டே மாகா­ண­ச­பையும் முத­ல­மைச்­சரும் சரி­யில்­லை­யென்ற நிலைப்­பாட்டை உரு­வாக்­கு­வ­தற்கு, பல்­வேறு வகை­யான திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அதில் ஒன்­றுதான் இந்த 65 ஆயிரம் வீட்­டுத்­திட்டம்.

இவ்­வ­ளவு பெருந்­தொ­கைக்கு வீடு­களை கட்­டிக்­கொ­டுப்­பதை பார்க்­கிலும், இலட்­சக்­க­ணக்­கா­ன­வர்கள் இப்­ப­கு­தியில் வீடற்­ற­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். அவர்­க­ளுக்கும் சேர்த்து வீடு­களை பாதி விலையில் அமைத்துக் கொடுக்­கலாம். இந்த உருக்கு வீடுகள் எங்­க­ளது கால­நி­லைக்கு பொருத்­த­மற்­றவை என கூறியிருந்தோம். அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு கட்டில்களையும், வாயு அடுப்புக்களையும், தளபாடங்களையும் கொடுக்கும் போது அது உருக்கு வீடோ, பொருத்து வீடோ அவர்களுக்கு அது பெரிதாகத்தான் இருக்கும். ஆனால் நாங்கள் தொலைநோக்கிலும் எல்லா மக்களையும் சார்ந்துதான் சிந்திக்க முடியும் என்றார்
« PREV
NEXT »

No comments