Latest News

April 13, 2016

இராணுவ ஆட்சியே வடக்கில் நிலவுகிறது
by admin - 0

வட மாகாணத்தில் நல்லாட்சி அரசாங்கத் தின் ஆட்சிக் காலத்திலும் சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மஹிந்த ஆட்சிக்கு ஒப்பான இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது. தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கே முப்படையினரும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர் என்று வட மாகாண சபையின் நேற்றைய அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று கைத­டி­யி­லுள்ள மாகாண சபையின் பேரவை செய­ல­கத்தில் சி.வி.கே.சிவ­ஞானம்
தலை­மையில் நடை­பெற்­றது.

குறித்த சபை அமர்­வா­னது நேற்று விசேட அமர்­வாக நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்ட நிலையில் அர­சி­ய­ல­மைப்பு சீர்திருத்தம் தொடர்பான திட்ட வரைபு முழுமை பெறா­மை­யினால் இந்த அமர்வில் பிரே­ரணை மற்றும் நியதிச் சட்­டங்கள் தொடர்­பாக ஆரா­யப்­பட்­டது.

இதன்போது முக்­கி­யத்­துவம் வாய்ந்த பிரே­ர­ணை­யாக முல்­லைத்­தீவு மாவட்டம் கொக்­குத்­தொ­டுவாய் வடக்கு கிராம அலு­வலர் பிரிவில் புலி­பாய்ந்தகல் அரு­கா­மையில் அத்­து­மீறி குடி­யேறி கடற்­றொ­ழிலில் ஈடு­பட்டு வரும் மீன­வர்கள் தொடர்­பாக தகவல் சேக­ரிக்கச் சென்ற கிராம அலு­வலர் அத்­து­மீறி கடல் தொழில் செய்த தென்­னி­லங்கை மீன­வர்­களால் தாக்­கப்­பட்­ட­துடன் இரா­ணுவ அதி­காரி கிராம அலு­வ­லரின் தேசிய அடை­யாள அட்டை மற்றும் உத்­தி­யோக அடை­யாள அட்­டை­களைப் பறித்து மரி­யா­தைக்­கு­றை­வான வார்த்­தை­களால் திட்­டி­ய­மைக்குக் கண்­டனம் தெரி­வித்து பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது.

குறித்த பிரே­ர­ணையை முன்­வைத்து உரை­யாற்­றிய வட­மா­காண சபை உறுப்­பினர் ரவி­கரன் குறிப்­பி­டு­கையில்,

இறு­தி­யாக நடை­பெற்ற மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக்­கூட்­டத்தில் வெ ளிமா­வட்ட மீன­வர்கள் முல்­லைத்­தீவு கரை­யோ­ரங்­களில் அனு­மதி இன்றி தங்­கி­யி­ருந்து மீன்­பி­டிப்­பது தடுத்து நிறுத்­தப்­ப­ட­வேண்­டு­மெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இத­ன­டிப்­ப­டையில் அர­சாங்க அதி­பரின் பணிப்­பின்­படி கிராம அலு­வ­லர்­க­ளுக்குத் தெரி­யாமல் கடற்­றொ­ழிலில் ஈடு­பட்­டி­ருக்கும் வெ ளிமா­வட்ட மீன­வர்­களின் விப­ரங்கள் சேக­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

கொக்­குத்­தொ­டுவாய் வடக்கு கிராம அலு­வலர் பிரிவில் புலி­பாய்ந்­தகல் அரு­கா­மையில் இவ்­வாறு அத்­து­மீறி குடி­யேறி கடல் தொழிலில் ஈடு­பட்­டு­வரும் மீன­வர்கள் தொடர்­பாக தகவல் சேக­ரிக்­கச்­சென்ற கிராம அலு­வலர் சீவ­ரட்ணம் யேசு­ரட்ணம் அத்­து­மீறி கடல் தொழிலில் ஈடு­பட்­டு­வரும் சிங்­கள மீன­வர்­களால் தாக்­கப்­பட்­டுள்ளார்.

பின்னர் இம்­மீ­ன­வர்­களால் தொலை­பேசி மூலம் தகவல் அனுப்­பப்­பட்டு 593ஆவது படைப் பிரிவின் கேணல் சமந்த சில்வா உட்­பட சில இரா­ணு­வத்­தினர் அங்கு வருகை தந்­துள்­ளார்கள். கேணல் சமந்த சில்வா கிராம அலு­வ­லரின் தேசிய அடை­யாள அட்டை மற்றும் உத்­தி­யோக அடை­யா­களை பறித்து அவரை மரி­யாதைக் குறை­வான வார்­த­தை­களால் திட்டி உள்ளார். இது என்ன? சிவில் நிர்­வா­கமா? அல்­லது இரா­ணுவ ஆட்­சியா? நடக்­கின்­றது. பொறு­மைக்கும் எல்லை உண்டு என்­பதை தெரி­விப்­ப­தோடு இரா­ணுவ கடற்­ப­டையின் ஒத்­து­ழைப்­புடன் அரங்­கேற்றி வரும் இப்­ப­டி­யான சட்டம் ஒழுங்கு சீர்­கு­லைவை மாவட்­டத்தின் மக்கள் சார்­பாக வன்­மை­யாக கண்­டிக்­கின்றேன்.
அவர்கள் பிழை செய்தால் குற்­ற­மில்லை. நாங்கள் பிழை செய்­யா­மலே குற்­ற­வா­ளி­க­ளாக்­கப்­ப­டு­கின்றோம். நல்­லாட்சி என்று சொல்­லப்­படும் அர­சுக்கு தெரி­யப்­ப­டுத்­து­கின்றேன். இப்­ப­டி­யான அரா­ஜ­கங்கள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும் என்றார்.
எம்.கே.சிவாஜிலிங்கம்
இது தொடர்பில் வட­மா­காண சபை உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் கருத்துத் தெரி­விக்­கையில்,
முல்­லைத்­தீவு மாவட்ட மக்கள் நெருப்பில் நின்று வேலைகள் செய்­ய­வேண்­டி­யுள்­ளது. அத்­து­மீ­றிய செயற்­பா­டுகள் அதி­க­ரித்துக் கொண்டு செல்­கின்­றன. குறிப்­பாக வடக்கில் காணி சுவீ­க­ரிப்­பிற்­கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு இருக்­கி­றது. மக்கள் அழுது கொண்டு திரி­கி­றார்கள். இதற்கு முடிவு வேண்டும்.
இதன் கார­ண­மா­கவே நாம் மாவட்ட செய­ல­கத்தை முடக்­கினோம். தொடர்ந்து இத்­த­கைய செயலை தடுப்­ப­தற்கே வட­மா­காண முத­ல­மைச்சர் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றார்.
சர்வேஸ்வரன்
வட­மா­காண சபை உறுப்­பினர் சர்­வேஸ்­வரன் குறிப்­பி­டு­கையில்,
முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் தென்­னி­லங்கை மீன­வர்கள் அத்­து­மீறுவது தொடர்பில் மத்­திய கடற்­றொழில் அமைச்சரிடம் கூறியும் சட்­ட­வி­ரோத செயற்­பாடு அதன் பின்னரும் நடக்கின்றது என்றால் நல்­லாட்சி அரசில் இரா­ணுவ ஆட்­சியே நடக்­கி­றது.
தேசிய பாது­காப்பு என்று கூறி கிழக்கு மாகாணம் சிங்­க­ள­மாக மாறி­யது போன்று வடக்­கையும் அவ்­வாறே ஆக்­கி­ர­மிப்புச் செய்­வதில் முப்­ப­டை­யி­னரும் திட்­ட­மிட்டு செயற்­பட்டு வரு­கின்­றனர்.
தேசிய பாது­காப்பு என்­பது மற்­றொரு நாடு உள்­நு­ழை­வதைத் தடுப்­ப­தற்­கான செயலாகும். ஆனால் இலங்­கையில் இது வேறு மாதி­ரி­யான அர்த்­தத்தைக் கொண்­டுள்­ளது. அத்­து­மீ­றிய தொழில்களையும் குடி­யேற்­றங்­களையும் மேற்­கொண்டு இரா­ணுவ ஆட்­சியைதான் அரசாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. இதை உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­ட­வேண்டும் என்றார்.
வட­மா­காண சபை உறுப்­பினர் விந்தன் குறிப்­பி­டு­கையில்,
வடக்கில் நயி­னா­தீவில் நாக­வி­காரை, யாழ்.நகர் ஆரிய குளத்தில் நாக­வி­காரை, மாத­கலில் விகாரை உள்­ளன. இங்கு தெற்கில் இருந்து பௌத்த மக்கள் வரு­கி­றார்கள் வழி­ப­டு­கின்­றார்கள். ஆனால் நயி­னா­தீவில் கட­லுக்குள் புத்­தரை கட்­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது. இதற்கு யார் அனு­மதி வழங்­கி­யது.

இங்கு கடற்­க­ரையை அண்­மித்த பகு­தியில் கட்­டடம் அமைத்­தாலோ மைதானம் அமைத்­தாலோ சட்டம் பாய்­கி­றது. ஆனால் கட­லுக்குள் கட்­டு­வது என்றால் எதுவும் செய்­ய­மாட்­டார்­களா?

வடக்கில் இவ்­வா­றான பௌத்த விகா­ரை­களை அமைத்து சர்­வ­தே­சத்­திற்கு பௌத்த தேச­மாக காட்டுவதற்கே இவ்வாறான முயற்சி நடக்கிறதா? எனக் கேட்­ட­துடன் பலரும் எதிர்ப்புத் தெரி­வித்து வரும் நிலையில் வடக்கு மாகாண சபையும் இதனைத் தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றார்.

முதலமைச்சர் கருத்து
இதன்­போது கருத்துத் தெரி­வித்த வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், எதிர்­வரும் 18ஆம் திகதி ஜனா­தி­பதி, பிர­த­ம­ருடன் வட­மா­காண காணிப் பிரச்­சி­னைகள் தொடர்பில் கலந்­து­ரை­யாட வரு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு நான் செல்­வ­தனால் வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ளிடம் உள்ள காணிப் பிரச்­சினை தற்­போ­தைய பிரச்­சி­னைகள் தொடர்பில் தர­வு­க­ளுடன் தந்­து­த­வு­மாறும் 18ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள சந்­திப்பில் இவை குறித்து கலந்­து­ரை­யா­டு­வ­தா­கவும் தெரி­வித்தார்.
« PREV
NEXT »

No comments