Latest News

April 22, 2016

எதிர் கட்சித் தலைவர் சம்பந்தனிற்கு வழிவிட்ட இராணுவ சிப்பாய் மீது தாக்குதல்
by admin - 0

கடந்த வாரம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன், பரவிபாஞ்சான் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்வதற்காக வழியை திறந்துவிட்ட இராணுவ சிப்பாய் மீது இராணுவ கேணல் தர அதிகாரி ஒருவர் தாக்குதலை மேற்கொண்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட எதிர்கட்சி தலைவரிடம் பரவிபாஞ்சான் கிராமத்தில் மீள்குடியேற்றத்திற்கு இன்னும் அனுமதிக்கப்படாத மக்கள் சிலர் தங்களின் காணிகள் உயர்பாதுகாப்பு பிரதேசமாக காணப்படுகிறது என முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்மந்தன் பரவிபாஞ்சான் உயர் பாதுகாப்பு பிரதேசத்தினை பார்வையிட சென்றுள்ளார். அப்போது வீதி தடைப் போடப்பட்டிருந்த பாதையில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் வீதியின் தடையை அகற்றி உள்ளே செல்ல வழிவிட்டுள்ளார்.

திடீரென எதிர்கட்சித் தலைவரின் வாகன தொடரணி சென்ற போது செய்வதறியாத இராணுவ சிப்பாய் தனது மேலதிகாரிகளின் அனுமதி இன்றி உள்ளே செல்ல அனுமதித்துள்ளார். இதனால் கோபமடைந்த குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ கேணல் நிலை அதிகாரியொருவர் குறித்த சிப்பாயியை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments