Latest News

March 11, 2016

ஆரம்பமாகியது வடக்கின் போர்; முதல் நாள் ஆட்ட நேரமுடிபில் இரு கல்லூரியும் போராட்டம்
by admin - 0

வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியின் 110 ஆவது போட்டி யாழ்ப் பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று கோலாகல மாக ஆரம்பமானது.

முதலாம் நாளில் இரு அணி களுமே கடுமையான போட்டி வெளிப்படுத்தியதோடு, சென். ஜோன்ஸின் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ள யாழ்.மத்தி சிறியளவிலான முன்னிலையைப் பெற்றுள்ளது.
யாழ்.மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டுப்பூர்த்தியும் இவ்வாண்டே என்பதன் அடிப்படையில், இப்போட்டி விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டிக்கான பிரதம விருந்தினராக, 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க கலந்து கொண்டார்.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்.மத்தியின் தலைவர் சி.அலன்ராஜ் தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்.மத்திய கல்லூரி அணி 75.4 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி சகல விக் கெட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது.முதலாவது விக்கெட்டை 6 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, இரண்டாவது விக்கெட்டுக்காக 63 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், அதன் பின்னர் விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

துடுப்பாட்டத்தில் அ.ஜெரோ ­ன் 51, உப தலைவர் ச.கோமே தகன் 39 ஓட்டங்களைப் பெற்ற னர். வேறு எந்த வீரரும் 20 ஓட்டங்களைத் தாண்டியிருக்க வில்லை.
பந்துவீச்சில் வ.ஜதுசன் 4, ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர் ம.நிலோஜன் 3, அணித்தலை வர் அ.கானாமிர்தன் 2 விக் கெட்டுக்களைக் கைப்பற்றி னர்.

தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்.ஜோன்ஸ் அணி நேற்றைய நாள் முடிவில் 26 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
முதலாவது விக்கெட்டுக்காக 26 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, அதன் பின்னர் விக்கெட்டுக்களை இழந்தது.

துடுப்பாட்டத்தில் க.கபில் ராஜ் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களுடன் களத்தில்காணப் படுகிறார். பந்துவீச்சில் ஹ.தீபன்ராஜ் 2 விக்கெட்டுக் களையும் சி.தசோபன், அணித் தலைவர் சி.அலன்ராஜ் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
நேற்றைய போட்டியானது இரசிகர்கள் யாரும் மைதானத்துக்குள் உள்நுழையாத படி  கடுமையான கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டது.

இவ்வாறான அளவுக்கு அதிகமான கட்டுப்பாடு ஆனது பாரம்பரியமாக நடை பெற்றுவரும் மேற்படி போட்டியின் உற்சாகத் தன்மையினையும் கட்டுப்படுத்துவதாக ஒரு சில கிரிக்கெட் ரசிகர்கள் நேற்றையதினம் மைதானத்துக்குள் வைத்து விசனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments