Latest News

March 22, 2016

கருணாவின் தொலைபேசி வேலைசெய்கிறது ஆனால் கருணா பதில் தரமால் ஓடி ஒழிக்கிறார்
by admin - 0

இறுதிப் போரில் தேசிய தலைவர் தப்பிவிட்டார் என்றும். பொட்டு அம்மான் தமிழ் நாட்டில் மறைந்து வாழ்கிறார் என்றும் பல செய்திகள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இன் நிலையில் நந்திக் கடல் களப்பில் தலைவர் இறந்ததாக ஒரு உடலத்தை காட்டி. அதனை கருணா மற்றும் தயா மாஸ்டர் ஆகியோருக்கு ராணுவம் காண்பித்தது. இவர்கள் இருவரும் இறந்து கிடப்பது தலைவர் தான் என்று கூறினார்கள். தற்போது எழுந்துள்ள செய்தி தொடர்பாக இந்தியாவில் உள்ள பல ஊடகங்கள் கருணாவை தொடர்புகொண்டு இது தொடர்பாக கேட்க்க முற்பட்டுள்ளது. ஆனால் அவரது தொலைபேசி அலறுகிறது. மனுஷன் எந்த அழைப்பையும் எடுக்கவில்லை.

இதனால் மேலும் ஒரு படி போய், எப்படியோ அவரது தனிப்பட்ட மோபைல் போன் நம்பரைக் கூட எடுத்து தமிழ் நாட்டு பத்திரிகையாளர்கள் தொடர்பு கொள்ள முனைந்துள்ளார்கள். அதற்கும் கருணா அழைப்பை ஏற்க்கவில்லை என்று கூறப்படுகிறது. கருணாவுக்கு மிகவும் நெருக்கமான பெண் ஒருவரை தொடர்புகொண்ட பத்திரிகையாளர் சிலர் இது தொடர்பாக கேட்டபோது. கருணாவா அவர் யார் என்று எனக்கு தெரியாது என்று அந்த அம்மா பதில் கூறியுள்ளாராம். முன் நாள் பிரதி அமைச்சர் என்று கூறியும் அவரை எனக்கு தெரியவே தெரியாது என்று கூறி அவர் போனை அடித்து வைத்துவிட்டாராம்
« PREV
NEXT »

No comments