Latest News

March 14, 2016

இலங்கையின் முதலாவது தமிழ் விவசாயக் கல்லூரி
by admin - 0

கிழக்கு மாகா­ணத்தின் முத­லா­வதும் இலங்­கையின் முத­லா­வதும் தமிழ் மொழி­மூ­ல­மா­ன­து­மான விவ­சாயக் கல்­லூரி அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பால­முனைப் பிர­தே­சத்தில் திறந்து வைக்­கப்­பட்­டது.

இக்­கல்­லூ­ரியின் உத்­தி­யோ­க­பூர்வத் திறப்பு விழா பால­முனை விவ­சாயக் கல்­லூ­ரியின் அதி­பரும் உதவி விவ­சாயப் பணிப்­பா­ள­ரு­மான எம்.எப்.ஏ.சனீர் தலை­மையில் இடம்­பெற்­றது.4

இவ்­வி­ழாவில் விவ­சாயத் திணைக்­கள விரி­வாக்கல் மற்றும் விவ­சா­யப்­ப­யிற்சிப் பணிப்­பாளர் ஆர்.எஸ். விஜ­ய­சே­கர பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண் டார்.

விவ­சாய விரி­வாக்க பணிப்­பாளர் ஆர்.எஸ். விஜ­ய­சே­கர பால­முனை விவ­சாயக் கல்­லூரி அபி­வி­ருத்திச் சபை சார்­பாக முன்னாள் தவி­சாளர் எம்.ஏ. அன்­சி­லினால் பொன்­னாடை போர்த்­தியும் கல்­லூரி நிர்வா­கத்­தி­னரால் நினை­வுச்­சின்னம் வழங்­கியும் கௌர­விக்­கப்­பட்­ட­தோடு பால­முனை விவ­சாயக் கல்­லூ­ரியின் அதி­பரும் உதவி விவசாயப் பணிப்பாளருமான எம்.எப்.ஏ. சனீர், விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் ஆகியோரும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்
« PREV
NEXT »

No comments