Latest News

February 19, 2016

வவுனியா மாணவி வன்புணர்வின் பின்னரே கொலை : மருத்துவப் பரிசோதனை அறிக்கை தகவல்
by admin - 0

வவுனியா உக்குளாங்குளத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவி வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த தகவலை வவுனியா மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை ஆசிரியையான தாயாரும் சகோதரர்களும் பாடசாலைக்கும் சென்றிருந்த நிலையில், தனிமையில் இருந்த மாணவி தாயார் வீடு திரும்பியபோது வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.
இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் மற்றும் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
வவுனியா வைத்தியசாலை நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி ஜே.சி.சமரவீர கடமை நிமிர்த்தம் கொழும்பு சென்றிருந்தமையால், நேற்று வியாழக்கிழமையே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இம் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் தெரிவிக்கையில்,

குறித்த மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவரிடம் இருந்து காப்பாற்ற முயன்றுள்ளார். இருப்பினும் வன்புணர்வின் பின் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, அதன் பின் தூக்கில் போடப்பட்டுள்ளது.

இதனால் இக் கொலை மற்றும் வன்புணர்வின் தொடர்பான விசாரணை வவுனியா பெருங் குற்றத்தடுப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தின் துணையுடன் மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிசாரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சடலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, சடலத்தை இறுதிக் கிரியையின் போது புதைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மாணவியின் உடற்பாகங்கள் சில மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments