ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை மாலை முன்னாள் ஶ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை திடீரென சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டே ஸ்ரீ சாமகிறி தர்ம மகா சங்க சபையினால் கோட்டே ரஜமகா விகாரையில் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றிலேயே இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மத அனுட்டான நிகழ்வில் இருவரும் பூஜையின் முக்கிய நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சுதந்திர கட்சிக்குள் மகிந்தவின் ஆதரவு அதிகரித்த நிலையில் இவர்களின் இந்த சந்திப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment