Latest News

December 30, 2015

ஹிரு­ணிகா எம்.பி. கைது செய்யப்படுவாரா?
by admin - 0

தெமட்­ட­கொடை மேம்­பா­லத்­துக்கு அருகில் உள்ள ஆடை விற்­பனை நிலையம் ஒன்­றுக்குள் பட்­டப்­ப­கலில் அத்­து­மீறி அங்­கி­ருந்த ஊழியர் ஒரு­வரை டிபென்டர் வண்­டியில் கடத்திச் சென்று தாக்­கிய சம்­பவம் தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிரு­ணிகா பிரே­ம­ச்சந்­தி­ரவை கைது செய்ய முடி­யுமா முடி­யாதா என கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு சட்ட மா அதி­பரின் ஆலோ­சனையைக் கோரி­யுள்­ளது.

இந்த சம்­பவம் தொடர்பில் ஆறு பேரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வினர் கைது செய்­துள்ள நிலை­யி­லேயே அவர்­க­ளிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணையின் அறிக்கை, முறைப்­பாட்­ட­ளரின் வாக்கு மூலம், ஹிரு­ணிக்கா பிரே­ம­சந்­தி­ரவின் வாக்கு மூலம் உள்­ளிட்ட ஆவ­ணங்கள் இவ்­வாறு சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்­பட்டு ஆலோ­சனை கோரப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

பொலிஸ் குற்ற பதிவுப் பிரிவில் நேற்று காலை இடம்­பெற்ற விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில் கடத்­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட தனது 62 - 1859 என்ற இலக்­கத்தை உடைய டிபண்டர் வண்­டி­யுடன் சந்­தேக நபர்கள் ஆறு­பேரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில்(சீ.சீ.டி) பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிரு­ணிகா பிரே­ம­சந்திர் கைய­ளித்­ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்­யப்­பட்­டனர். தாக்­கு­த­லுக்கு உள்­ளா­ன­தாக கூறப்­படும் இளை­ஞ­ரது முறைப்­பாட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள தக­வல்­க­ளுக்கு அமை­வாக இந்த கடத்தல் மற்றும் தாக்­கு­த­லுடன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிரு­ணிகா பிரே­ம­சந்­தி­ர­வுக்கும் தொடர்பு உள்­ளதா இல்­லையா என்­பது குறித்து விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இது தொடர்பில் இரு வேறு வாக்­கு­மூ­லங்கள் ஹிரு­னிக்கா பிரே­ம­சந்­தி­ர­விடம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இந் நிலையில் ஊட­கங்கள் ஊடா­கவும் பல்­வேறு தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. எனினும் ஹிரு­னிக்கா நேர­டி­யாக கடத்­த­லுடன் தொடர்­பு­பட்­ட­தாக தெரி­ய­வ­ர­வில்லை. எவ்­வா­றா­யினும் அவர் ஊட­கங்கள் சில­வற்­றுக்கு வழங்­கிய செவ்­வி­களில் தான் குடும்ப பிரச்­சினை தொடர்பில் ஆலோ­சனை வழங்­கி­ய­தாக குறிப்­பிட்­டுள்ளார். ஊடக செய்­தி­களை நாம் நீதி­மன்றில் சாட்­சி­யங்­க­ளாக கொள்ள முடி­யாது. இது தொடர்பில் 1995 ஆம் ஆண்டின் சாட்­சிகள் கட்­டளைச் சட்டம் தெளி­வாக கூறு­கின்­றது.

இந் நிலையில் தான் நாம் தற்­போது வரை செய்­துள்ள விசா­ரணை அறிக்கை, ஹிரு­னிக்­காவின் வாக்கு மூலங்கள், கடத்­தப்­பட்ட இளை­ஞரின் வககு மூலம் உள்­ளிட்ட அனைத்து ஆவ­ணங்­க­ளையும் சட்ட மா அதி­ப­ருக்கு அலோ­சனைப் பெற அனுப்பி வைத்­துள்ளோம்.

ஒரு­வரை பல­வந்­த­மாக கடத்திச் சென்று ஆலோ­சனை வழங்க முடி­யாது. சட்­டத்தில் அதற்கு இட­மில்லை. யார் என்ன சொன்­னாலும் பொலிஸ் விசா­ர­ணைகள் சட்ட திட்­டங்­க­ளுக்கு அமை­வா­கவே இடம்­பெறும்.

எவ்­வா­றா­யினும் சம்­பவம் இடம்­பெற்ற குறிப்­பிட்ட நேரத்தில் கைதா­கி­யுள்ள சந்­தேக நபர்­க­ளுடன் ஹிரு­ணிக்கா பிரேம சந்­திர தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்­டுள்­ளாரா, கடத்தல் தொடர்பில் அவர் கட்­டளை பிறப்­பித்­தாரா, அது தொடர்பில் அறிந்­தி­ருந்­தாரா என நாம் தற்­போது அறி­வியல் தர­வு­களை வைத்து விசா­ர­ணை­களை நடத்­து­கின்றோம். தொலை­பேசி இலக்­கங்கள் குறித்­தான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்­க­வில்லை. இன்று (நேற்று) அவை கிடைக்கும் என நாம் எதிர்ப்­பார்க்­கின்றோம். அதன் பின்னர் அதனை மையப்­ப­டுத்­திய மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெறும் என்றார்.

கடந்த திங்­க­ளன்று பிற்­பகல் 2.30 மணிக்கு தெமட்­ட­கொட மேம்­பாலம் அருகே உள்ள ஆடை விற்­பனை நிலை­யத்­துக்கு டிபண்டர் வண்­டியில் வந்த 6 பேர் அங்கு சேவை­யாற்றி வந்த இளைஞர் ஒரு­வரை பலாத்­கா­ர­மாக கடத்திச் சென்­றுள்­ளனர். செவ­ன­கல பிர­தே­சத்தைச் சேர்ந்த யூ,பிரி­யங்­கர என்ற கொலன்­னாவை பகு­தியில் தற்­க­லி­க­மாக தங்­கி­யி­ருந்த இளை­ஞரே இவ்­வாறு கடத்­தப்­பட்­டி­ருந்தார்.

சம்­ப­வத்தைத் தொடர்ந்து ஆடை விற்­பனை நிலைய உரி­மை­யாளர் விட­யத்தை உட­ன­டி­யாக தெமட்­ட­கொட பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கவே விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­தர, கொழும்­புக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்ட மற்றும் கொழும்பு வடக்­குக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன ஆகியோரின் மேற்பார்வையில் தெமட்டகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுராத மஹிந்தசிறி தலமையிலான குழுவினர் விசாரணையை நடத்துகின்றனர். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் வெதிசிங்கவின் கீழ் பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினரும் விசாரணைகளை நடத்துகின்றனர்.
« PREV
NEXT »

No comments