Latest News

December 24, 2015

வெள்ளை வானுக்கு பதிலாக கறுப்பு வான் கலாசாரம் ஆரம்பம்
by admin - 0

வெள்ளை வான்கடத்தல் கலாசாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு கறுப்பு வான் கடத்தல் கலாசாரம் உருவாகியுள்ளது. கூட்டு கட்சிகளின் ஜனநாயக ஆட்சியில் இதுவும் ஒரு அடையாளமா என மக்கள் விடுதலை முன்னணியினர் கேள்வி எழுப்­பினர்.
news.black van

ஜனநாயகம் என்ற பெயரில் அடக்குமுறை அரசாங்கமே இன்றும் முன்னெடுக்கப்படுவதாக ஜே.வி.பி. குற்றம் சுமத்தியது.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றபோதே கட்சியின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலத்தில் ஆட்கடத்தல், காணாமல்போகும் கலாசாரம் அதிகமாகவே காணப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து ஜனநாயகம் பேசியதையும் நாம் அவதானித்தோம். அதேபோல் கடத்தல் சம்பவங்கள், காணாமல்போதலை தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஆட்சிமாற்றம் ஒன்றை மக்கள் மூலம் ஏற்படுத்தவும் அனைவரும் முன்வந்தோம். அவ்வாறான நிலையில் ஆட்சிமாற்றம் ஒன்றும் நிகழ்ந்தது. இந்த மாற்றத்தில் ஜனநாயகம் பலப்படுத்தப்படுவதுடன் வெள்ளை வான் கலாசாரம் உள்ளிட்ட அடக்குமுறை செயற்பாடுகள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்பனவும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இன்று வெள்ளை வான் கலாசாரம் அழிக்கப்பட்டாலும் கறுப்பு வாகனத்தில் கடத்தும் கலாசாரம் தலைதூக்கியுள்ளது. அமைச்சர்களின் தேவைக்கும் அவர்களின் பழிதீர்க்கும் நடவடிக்கைகளுக்கும் அமைய ஆட்களை கடத்தும் கலாசாரம் மீண்டும் இந்த ஆட்சியில் பலமடைந்து காணப்படுகின்றது. கடந்த ஆட்சியில் நடந்த மோசமான சம்பவங்க­ளையும் ஆட்­க­டத்தல் கலா­சா­ரத்­தையும் மாற்­ற­வேண்டும் என்று வலி­யு­றுத்தப்பட்­டதே தவிர வெள்­ளை­வே­னுக்கு பதி­லாக கறுப்பு டிபென்டர் வாக­னங்­களை மாற்­ற­வேண்டும் என கூற­வில்லை.

அதேபோல் ஆட்­க­டத்தல் அர­சி­யல்­வா­திகள் என கூறப்­படும் நபர்­களின் பின்­னணி என்ன? அவர்கள் எவ்­வா­றான சூழலில் வளர்ந்­த­வர்கள் என்­பது புதி­தாகக் கூற­வேண்­டிய அவ­சியம் இல்லை. கடந்த காலத்தில் இவர்­களின் அர­சியல் நட­வ­டிக்­கைகள் எவ்­வாறு அமைந்­தது என்­பதும் மக்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். ஆகவே, அர­சி­யல்­வா­தி­களை பற்றி கதைத்து மக்­களை ஏமாற்­றாது இந்த கலா­சா­ரத்தை முற்­றாக ஒழிக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

அதேபோல் பொரு­ளா­தார ரீதியில் இந்த அர­சாங்கம் மிகவும் மோச­மான கொள்­கை­க­ளையே முன்­வைத்­துள்­ளது. எந்த
அர­சாங்­கமும் மேற்­கொள்­ளாத வகையில் இந்த கூட்டு அர­சாங்கம் தமது பொரு­ளாதாரக் கொள்­கை­களை வர­வு­ – செ­லவு திட்­டத்தில் முன்­வைத்­துள்­ளது.

முன்­னைய அர­சாங்­கத்தின் ஊழல்­க­ளையும் கொள்­ளை­யையும் கண்­ட­றி­வ­தாக தெரி­வித்து உரு­வாக்­கிய இந்த அர­சாங்கம் இந்த ஆட்­சி­யிலும் ஊழல் நட­வ­டிக்­கை­யையே முன்­னெ­டுக்­கின்­றது. ஊழலில் ஏற்­பட்ட நஷ்டத்தை சமாளிக்க மக்களின் மீது பொருளாதார சுமைகளை சுமத்தி பணத்தை அறவிட முயற்சிக்கின்றது.

இவைகளும் நல்லாட்சியில் ஒரு அடையாளமா என்ற கேள்வியே இப்போது அனைவர் மத்தியிலும் எழுகின்றது. நல்லாட்சி என்ற பெயரில் அமைக்கப்பட்ட அரசாங்கமும் இன்று அராஜக அரசாங் கமாகவே மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
« PREV
NEXT »

No comments