Latest News

December 24, 2015

வானில் திடீரென தோன்றிய 4 மர்ம ஒளிகள்!
by admin - 0

வானில் திடீரென தோன்றிய நான்கு மர்ம ஒளியினால் வேற்றுக்கிரக வாசிகளின் படையெடுப்பாக இருக்கலாமோ என அச்ச நிலையும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது,



நேற்றைய தினம் சிலி நாட்டில் வானில் தோன்றிய மிதக்கும் விளக்குகள் வேற்று கிரகவாசிகளின் படையெடுப்பா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று சிலி. வேற்றுகிரகவாசிகள் இங்கு அதிகளவில் தென்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலியின் சாண்டியாகோ நகரில் வானத்தில் திடீரென பிரகாசமான வெளிச்சத்துடன் 4 மர்ம பொருட்கள் தென்பட்டது.

சிறிது நேரம் அப்படியே வட்டமடித்தபடி இருந்த அவை பின்னர் பிரிந்துசென்று காணாமல் போனது. அந்நகரை சேர்ந்த பெண் ஒருவர் இந்த காட்சிகளை தனது கமெராவில் பதிவுசெய்துள்ளார்.

பின்னர் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார். இது வேற்றுகிரக வாசிகள் என்றும் சிலரும் இது வானில் தெரிந்த சாதாரான பூச்சிகள் தான் என வேறு சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

« PREV
NEXT »

No comments