Latest News

November 25, 2015

யாழ் தம்பசிட்டி பிரதான வீதியை கவனிப்பது யார்? -உரியவர்களின் கவனத்திற்கு
by admin - 0

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் மிக பிரசித்தி பெற்ற இடம் மந்திகை மடத்தடி அச் சந்தியில் இருந்து தம்பசிட்டி செல்லும் மிக பிரதான பாதை குன்றும் குழியுமாக கேட்பார் அற்ற நிலையில் காணப்படுகின்றது.

இப் பிரதான பாதை யானது பல கிராமங்களை ஊடறுத்து செல்கின்றது இப்பாதையினை பயன்படுத்தி  பல மாணவர்கள் பாடசாலை செல்கின்றனர்.  

இந்தவகையில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுரி, மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலை, நெல்லியடி மத்திய கல்லுரி, மற்றும் யா/ வதிரி பெண்கள் பாடசாலை ஆகிய பாடசாலைகளிற்கு செல்லும் மாணவர்கள்  அவதிக்குள்ளாகின்றனர்.

அத்தோடு மந்திகை ஆதாரவைத்தியசாலைக்கான  பாதையாகவும் காணப்படுகின்றது மடத்தடியில் இருந்து தம்பசிட்டி பிரதான பாதையின் சொற்ப தூரத்தில் பாரிய பள்ளம் மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இதனால் இவ்விடத்தில் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன எனவே இப்பிரதான வீதியில் பாலம் ஒன்று அமைத்து வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வடமாகாண சபை உறப்பினர் ஆகியோரை மிகவும் பணிவாக வேண்டிக்கொள்ளுகிறேன் என்று
அவ் இடத்தைச் சேர்ந்த சமுக அக்கறையுள்ள தர்மலிங்கம் நிமலன் எங்கள் இணையதளத்திற்கு இவ் தகவலை  தெரிவித்துள்ளார்.



« PREV
NEXT »

No comments