Latest News

November 18, 2015

சித்திரவதை முகாமை பார்வையிட்டது ஐநா குழு
by admin - 0

இலங்கை சென்ற ஐநா குழு கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் திருகோணமலையில் கடற்படை வதை முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இடத்தை தாம் பார்வையிட்டதாக குறிப்பிட்டனர்.

இந்த முகாமில் ரகசியமாக ஆட்களை தடுத்து வைக்க கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இங்கு சித்திரவதைகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த முகாம் பெரும்பாலும் 2009 ஆம் இறுதி யுத்ததின் பின்னர் 2010 ஆம் ஆண்டளவில் நிறுவகிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த முகாமுக்குள் பல்வேறு வசதிகளும் ஆட்களை தடுத்து வைக்க கூடிய நிலத்துக்கடியிலான சுரங்கங்களும் அமைந்திருந்தன.

அத்துடன் 20100725 என்ற இலக்கம் சுவர் ஒன்றில்,  எழுதப்பட்டிருந்ததை கொண்டு முகாம் 25 ஜூலை மாதம் 2015 ஆம் ஆண்டளவியல் நிறுவகிக்கப்பட்டிருக்கலாம் என்ற எடுகோளை மேற்கொள்ள முடியும் என்றும் ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு இன்றைய கொழும்பு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

« PREV
NEXT »

No comments