Latest News

November 10, 2015

சுவிஸ் ஈழத்தமிழரவையின் ஒன்றுகூடல் – தமிழ்த்தேசியத்தின் எழுச்சிக்காய் பணிபுரிய விரும்புவோர் அனைவரையும் அழைக்கின்றோம்
by admin - 0

மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே!!

எமது இனத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் இன்றைய நிலையில், தாயகத்தில் எமது அடையாலங்கள் கருவறுக்கப்படும் நிலையில், புலத்திலும் தமிழினம் தன்னடையாளமிழந்துவரும் நிலையில் இவற்றை தடுத்துநிறுத்தி பலமான தமிழ்த்தேசிய அரசியலொன்றை நாம் எமது எதிர்காலச் சந்ததிக்காக உருவாக்கவேண்டியுள்ளது.
வெளிப்படைத்தன்மையானதும்;, மக்கள் மயப்படுத்தப்பட்டதுமான ஓர் தொலைநோக்கு சமூகக்கட்டமைப்பு நாடிழந்து போராடும் நம்மைப்போன்ற இனத்திற்கு தாயகத்திலும, புலத்திலும் எமது இனத்தின் விழுமியங்களை கட்டிக்காப்பாற்றவும், ஒற்றுமையான பலம்வாய்ந்த அரசியல் சக்தியாக எமது உரிமைகளை வெண்றெடுப்பதற்கும் அவசியமாகிறது.
சுவிஸ் ஈழத்தமிழரவை இப்பணியை சுவிஸ் மண்ணில் சிறுகச் சிறுக செய்து வந்தாலும் 2009 இற்கு பின்னராண சோர்வுத்தன்மையும், தன்னம்பிக்கையிழந்த தாழ்வு மனப்பாண்மையும் பலர் செயற்பாட்டை தடுத்துநிக்கிறது. இந்த எமது பலவீனமே  எதிரிக்கு பெரும் பலமாகவும், எதிரியின் ஆயுதமாவம் திகழ்கிறது.
நாம் தட்டிக்கேட்காதரவைக்கும் அடக்குவோர் அடக்கியாழ்வர், நாம் ஒவ்வொருவரும் எம்மினத்தின் விடுதலைக்காய் உழைத்துக் கொள்ளாதவரை மாற்றம் என்ற சொல் மாறினால்கூட  வேறொன்றும் மாற்றமடையாது.
முள்ளிவாய்க்கால் பின்னடைவென்பது வெற்றிக்கான வாய்ப்பே இல்லை என்று பொருட்படாது!!!!
புறப்படு தமிழா இன்றே.. உனக்காக கடமைகள் காத்துக் கிடக்கிறது.
தேசிய ரீதியாகவும் மற்றும் அனைத்துலக ரீதியாகவும் நாம் பல வேலைத்திட்டங்களை வெற்றியாக முன்நகர்த்தியுள்ளோம்.(தொகுப்பை பார்வையிட…) அத்துடன் மாவீரர்நாள் அன்மிப்பதால்  அதுசார்ந்த வேலைத்திட்ங்களையும், அடுத்த ஆண்டுக்கான வேலைத்திட்டங்களையும் குறிப்பாக வேலைப்பகிர்வுகளையும் நாம் மேற்கொள்ளவேண்டியுள்ளது.
புதிய வீச்சுடன் புத்துயிர்பெற்று வேகமாக நமது தாயகம் நோக்கி பயணிப்போம். எதிர்வரும் ஆண்டை விடுதலை எழுச்சி வீரியமடைந்த புரட்சி ஆண்டாக மாற்றியமைப்போம். அதற்காக எம்முடன் புதியவர்களையும் இணைத்து பணியாற்ற முன்வருவோம்.
இம்முறை அனைத்து மாநிலங்களிலும் இருந்து இரு பிரதிநிதித்துவம் கட்டாயமக எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மாநில ரீதியான வேலைப்பகிர்வுகளும் இறம்பெறவுள்ளது. புதிய வேகத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்காலத்தை நோக்கி தமிழ்த்தேசிய பாதையை சீரமைக்க அனைவரும் கைகொடுக்கவும்.
உங்கள் வரவை கட்டாயம் உறுதிப்படுத்தவும்.
திகதி: 14. நவம்பர் 2015 – சனிக்கிழமை
நேரம் 14.00 மணி தொடக்கம் 18.00 மணி வரை
இடம்:
Quartierzentrum Aussersihl
Hohlstrasse 67, 8004 Zürich
தொடர்புகொள்ள:
0041 (0) 79 193 86 69
0041 (0) 32 631 05 27
0041 (0) 79 705 63 35
« PREV
NEXT »

No comments