Latest News

October 05, 2015

எக்நெலிகொட சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட முகாமை சோதனையிட அனுமதி
by Unknown - 0

ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் கிரித்தலே இராணுவ முகாமை சோதனையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ முகாமை சோதனையிட அனுமதியளிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

கடத்தல் சம்பவம் தொடர்பில் சில புலனாய்வு உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
« PREV
NEXT »

No comments