Latest News

October 06, 2015

சிறைக்காவலர்கள் தம்மிடம் பணம் கேட்பதாக கைதிகள் கூக்குரல் - நீதிமன்றத்தில் சிலநிமிடங்கள் பரபரப்பு
by Unknown - 0

சிறைக்காவலர்கள் தாங்கள் பணம் வழங்காவிட்டால் தங்களை தாக்குகின்றனர் என சிறைக்கைதிகள் கூட்டாக கூக்குரலிட்டதை தொடர்ந்து நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சிலநிமிடங்கள் பரபரப்பு தோன்றியது. சிறைக்காவலர்கள் பலவந்தமாக எங்களிடமிருந்து பணம்பறிக்கின்றனர். சிலர் ஈசட் காஸ் முறையை கூட பயன்படுத்துகின்றனர்.

எங்களை பார்ப்பதற்கு வரும் உறவினர்களிடம் இவர்கள் 5000 ரூபாயை கோருகின்றனர்,பணம் தராவிட்டால் எங்களை தாக்குகின்றனர், இன்று காலையும் நாங்கள் தாக்கப்பட்டோம்,குமார என்ற அதிகாரிக்கு நாங்கள் பணம் செலுத்தவேண்டியுள்ளது என சிறைக்கைதிகள் கூக்குரலிட்டனர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர்,அவர்களில் குற்றம்சாட்டப்பட்ட குமார என்ற அதிகாரியும் காணப்பட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments