Latest News

October 05, 2015

வித்தியா, சேயா கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரி யாழிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரை
by Unknown - 0

புங்குடுதீவு மாணவி வித்தியா, சிறுமி சேயா ஆகியோரின் படுகொலையைக் கண்டித்தும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும், இ.போ.ச. வடக்கு ஊழியர்கள் யாழிலிருந்து கொழும்பு வரை பாதயாத்திரை செல்கின்றனர்.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று 7 மணிக்கு ஆரம்பமாகிய இந்தப் பாதயாத்திரை மாலை கிளிநொச்சி வரை சென்றடையும்.

நாளை கிளிநொச்சியிலிருந்து வவுனியாவைச் சென்றடையும்.நாளை மறுதினம் வவுனியாவிலிருந்து ஆரம்பமாகி அநுராதபுரத்தைச் சென்றடைந்து எதிர்வரும் வியாழக்கிழமை அங்கிருந்து மாகோவை சென்றடையும்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாகோவிலிருந்து குருநாகலுக்குச் சென்று அங்கிருந்து சனிக்கிழமை காலை புறப்பட்டு வறக்காப்பொலவைச் சென்றடையும்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வறக்காபொலவிலிருந்து கம்பஹாவைச் சென்றடையும்.மறுநாள் திங்கட்கிழமை கம்பஹாவிலிருந்து கொழும்பை சென்றடையும்.

குறித்த பாதயாத்திரையில் சமூக அக்கறை கொண்டவர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments