Latest News

October 19, 2015

வன்னி போரில் கணவனை இழந்தவர்களுக்கு கானா நாட்டில் வாழும் சதீஸ் நிதியுதவி
by admin - 0

வன்னி போரில் கணவனை இழந்தவர்களுக்கு கானா நாட்டில் வாழும் சதீஸ் நிதியுதவி 



வடமராட்சி அல்வாய் கிழக்கு பகுதியை சேர்ந்த கணேசராசா சதீஸ் தனது 5வது திருமண ஆண்டு நினைவு நிகழ்வை முன்னிட்டு வன்னிபோரில் கணவனை இழந்தவர்களுக்கு வாழ்வதார உதவிகளை வழங்கியுள்ளார் கடந்த வருடம் தனது மகனின் பிறந்தநாள் விழாவை  வன்னியில் உள்ள சிறுவர் இல்லத்தில் கொண்டினார்.

 அத்துடன் அங்குள்ள சிறுவர்களுக்கு கல்வி செயற்பாடுகளுக்கு நிதியுதவி வழங்கி சிறுவர்களை ஊக்கப்படுத்தினார் வருடா வருடம் மகனின் பிறந்த நாள் மற்றும் சதீஸ் கிருந்திகா தம்பதிகள் தமது திருமண நிகழ்வு தினங்களை வன்னிபோரில் பாதிக்கப்பட்டவர்களுடன் கொண்டாடிவருவதுடன் அவர்களுக்கு நிதியுதவிகளையும் வழங்கிவருகின்றனர்.

 இவர்களை போன்று புலம்பெயர் வாழ் மக்கள் உங்கள் திருமண நாள் குழந்தைகளின் பிறந்தநாள் உங்கள் வீட்டில் நடைபெறும் மகிழ்சியான நிகழ்வுகள் நாட்களில் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவி வழங்க முன்வரவேண்டும். அதற்கு முன்மாதிரியாக இவர்கள் இருப்பார்கள்.
« PREV
NEXT »

No comments