கடந்த 18ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் காரசாரமாக நடைபெற்று முடிந்தது. அதன் பிறகு பாண்டவர் அணி வெற்றி கண்டது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் இன்று வெற்றிக்கு பின் பாண்டவர் அணி நன்றி தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகின்றனர்.
இதில் பேசிய பொதுச்செயலாளர் விஷால் "நாங்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தேர்தலின் போது பாண்டவர் அணியாக செயல்பட்ட நாங்கள், இனிமேல் பாண்டவர் அணியாய் இல்லாமல் நடிகர்களாக எல்லாரும் ஒன்றிணைந்து செயல்பட போகிறோம்.
SPI ஒப்பந்தம், நடிகர் சங்கக்கட்டிடம் குறித்த விவகாரங்கள் மற்றொரு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என நடிகர் விஷால் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு புதிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். இயக்குனர்கள் சங்கமும் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது.
No comments
Post a Comment