Latest News

October 18, 2015

காணாமல் போன சிறுமியை மீட்டுத் தருமாறு ஆர்ப்பாட்டம்
by admin - 0

மட்­டக்­க­ளப்பு கோற­ளைப்­பற்று மத்தி வாழைச்­சேனை பாலை­நகர் பகு­தி­யினைச் சோ்ந்த 13 வய­து­டைய மாணவி முஹம்­மது அலியார் பாத்­திமா அஸிமா கடந்த 27ஆம் திகதி பாட­சா­லைக்கு செல்­லும்­போது காணாமல் போயுள்ளார்.

இவரை கண்­டு­பி­டித்து தரு­மாறும்.இதன் சூத்­தி­ர­தாரி சட்­டத்தின் முன் நிறுத்­தப்பட்டு இக்­கு­டும்­பத்­திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுகோரி தியா­வட்­டவான் ஹுசை­னியா ஜிம்மா பள்­ளி­வாயல் மற்றும் பாலை நகர் றகு­மா­னியா ஜும்மா பள்­ளி­வா­யல்கள் இணைந்து நேற்று(16.10.2015) வெள்ளிக்­கி­ழமை ஜும்மா தொழு­கையின் பின்பு குறித்த கவன ஈர்ப்பு போராட்­டத்­தினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர்.

மட்­டக்­க­ளப்பு – கொழும்பு பிர­தான வீதி வழி­யாக கையில் வாச­கங்கள் அடங்­கிய பதா­தை­களை ஏந்­தி­ய­வாறு ஊர்­வ­ல­மாக நடந்து சென்று கோஷங்­களை எழுப்பி கவ­ன­ஈர்ப்பு போராட்­டத்­தினை கோற­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­ல­கத்­திற்கு முன்­பாக மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இதன்­போது மேற்­படி விடயம் தொடர்­பான கோரிக்கை அடங்­கிய மகஜர் ஒன்­றினை கோற­ளைப்­பற்று மத்தி பிர­தே­ச­செ­ய­லா­ள­ரிடம் காணாமல் போயுள்ள பாத்­திமா அஸி­மாவின் பெற்­றோர் கைய­ளித்­தனர்.குறித்த மக­ஜரில் தெரிவிக்­கப்­பட்­டுள்­ள­தா­வது.

பாலை நகர் மத்­ரஸா குறுக்கு வீதியைச் சோ்ந்த முஹம்­மது அலியார் பாத்­திமா அஸிமா எனும் மாணவி கடந்த 27 ஆம் திகதி அன்று பாட­சா­லைக்கு செல்­லும்­போது காணாமல் போயுள்ளார்.

இது தொடர்­பாக வாழைச்­சேனை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

எனினும் இது­வரை காணாமல் போன குறித்த மாணவி கண்டு பிடிக்­கப்­ப­ட­வு­மில்லை.இது குறித்து புல­னாய்வு தொடர்­பான முன்­னேற்­றங்கள் நீதி­மன்­றத்­திற்கு உரிய காலத்­திற்குள் அறிக்­கை­யி­டப்­ப­ட­வு­மில்லை.

எனவே குறித்த மாணவி கண்டு பிடிக்­கப்­பட வேண்டும்.இதன் சூத்­தி­ர­தாரி சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வேண்டும்.

இக் குடும்­பத்­திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது
« PREV
NEXT »

No comments