Latest News

October 13, 2015

பூநகரியில் காணி சுவீகரிக்க மீண்டும் முயற்சி! பா.உறுப்பினர் சி.சிறீதரனால் முறியடிப்பு
by admin - 0

கிளிநொச்சி பூநகரி பரமன்கிராய் வெட்டுக்காடு பகுதியில் கடந்த மாதம் 2ம் திகதி நான்கு பேரின் காணிகளை நிலஅளவை செய்து சுவீகரிக்கச் சென்றவர்களை காணி உரிமையாளர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளும் திருப்பி அனுப்பியிருந்தனர்.
தற்பொழுது இன்று மீண்டும் இக்காணிகளை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி யாழ் மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரனின் தலையீட்டினால் தடுத்து நிறத்தப்பட்டுள்ளது.

மேற்படி கிராமத்தில் 8 ஏக்கர் காணிகளில் 1972ம் ஆண்டு தொடக்கம் இராமநாதன் தம்பையா, இராசையா பூபாலசிங்கம், சிவக்கொழுந்து நாகராசா, பொன்னையா கருணைச்செல்வன் ஆகியோர் வாழ்ந்து வந்துள்ளனர்.

1991ல் இராணுவ ஆக்கிரமிப்பு போர் காரணமாக இவர்கள் காணிகளை விட்டு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



வளம் நிறைந்த மேற்படி காணிகளில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து முகாமிட்டுள்ள நிலையில் காணி உரிமையாளர்கள் இன்றுவரை இரவல் காணிகளில் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.


« PREV
NEXT »

No comments