Latest News

September 30, 2015

யாழ் பண்ணைப் பகுதியில் சாராயம் குடித்துக் கொண்டிருந்த ரவுடிகள் கொத்தாகப் பிடிக்கப்பட்டனர்
by admin - 0

யாழ்.பண்ணை பகுதியில் மது அருந்தி கொண்டு இருந்த குழு ஒன்றினை யாழ்.காவற்துறையினர்  கைது செய்துள்ளனர்.

யாழ்.கோட்டை பகுதியின் பின் புறமாக உள்ள பண்ணை கடற்கரை பகுதி அழகாக்கப்பட்டு பொழுது போக்கு இடமாக மாற்றபட்டு உள்ளது. அப்பகுதியில் மாலை வேளைகளில் பெருமளவான மக்கள் வந்து கடற்கரை அழகை ரசிப்பதோடு அங்கு நடைபயிற்சிகளையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வார்கள்.

அப்பகுதிக்கு இரவு வேளைகளில் வரும் கும்பல்கள் அங்குள்ள இருக்கைகளில் அமர்ந்து இருட்டினுள் மது அருந்தி விட்டு மது போத்தல்கள் தாம் கொண்டு வந்த தின்பண்டங்கள் என்பவற்றை அப்பகுதிகளில் விட்டு விட்டு செல்வார்கள்.

அதனால் அப்பகுதியில் மறுநாள் அதிகாலை நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய செல்வோர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இந் நிலையில் இன்றைய தினம் இரவு யாழ்.காவற்துறையினரருக்கு வழங்கப்பட்ட ரகசிய தகவலையடுத்து பண்ணை கடற்கரை பகுதியில் திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். அதன் போது அப்பகுதியில் மது அருந்தி கொண்டு இருந்த கும்பல்களை கைது செய்து யாழ்.காவற்துறை நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். -
« PREV
NEXT »

No comments