Latest News

August 01, 2015

இங்கிலாந்தில் இடம்பெற்ற ஜெட் விமான விபத்தில் ஒசாமா பின்லேடனின் உறவினர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
by admin - 0

இங்கிலாந்தில் இடம்பெற்ற ஜெட் விமான விபத்தில்  ஒசாமா பின்லேடனின் உறவினர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் தெற்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள் சிக்கியது. இந்த விமான விபத்தில் விமானி உட்பட விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் பலியாகியுள்ளனர்.

விபத்தில் சிக்கிய அனைவரும் ஒசாமா பின்லேடனின் உறவினர்கள் என கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

பிரிட்டனுக்கான சவுதி அரேபிய தூதரும், உயிரிழந்தவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல், உயிரிழந்தவர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் உயிரிழந்தவர்களின் உடல் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் இறுதிச்சடங்கிற்காக ஒப்படைப்பதற்காக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சவுதி அரேபிய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் உள்ள முன்னணி பத்திரிகை ஒன்றில் விபத்து நடைபெற்றதை உறுதிப்படுத்தி செய்தி வெளியாகியுள்ளது.

அதில், பிளக்புஷ் விமான நிலையத்தில் இருந்து விமானம் டேக் ஆஃப் செய்யும் போது, விமானம் விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளது.

ஆனால், உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தவலும் அதில் வெளியாகவில்லை. எனினும் சமூக வலைதளங்களில், உயிரிழந்தவர்கள் அனைவரும் ஓசாமா பின்லேடனின் உறவினர்கள் என்ற செய்தி வெளியாகி வருகிறது.

இங்கிலாந்து நாளிதழ் டெய்லி மெய்லும் உயிரிழந்தவர்கள் ஒசாமா பின்லேடன் உறவினர்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments