ஐ.எஸ் ஆயுததாரிகளுடன் இலங்கை முஸ்லிம்கள் சுமார் 10பேர் இணைந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரைக்கும் 8 பேரினது தகவல்களை புலனாய்வுத் துறை திரட்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கொழும்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலிருந்து குறித்த ஆயுததாரிகளுடன் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் சிரியாவில் ஐ.எஸ் ஆயுததாரிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் உயிரிழந்த இலங்கையர் கலேவெல பிரதேசத்தில் சர்வதேச பாடசாலை ஒன்றின் அதிபர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்கா செல்வதாக கூறி, குறித்த பாடசாலையிலிருந்து விலகிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment