Latest News

July 02, 2015

இரண்டு கண் பார்வையை இழந்த முன்னாள் பெண் போராளிக்கு உதவும் இதயங்கள் அமைப்பு உதவி!
by admin - 0

இரண்டு கண் பார்வையை இழந்த முன்னாள் பெண் போராளி கணபதிப்பிள்ளை றஞ்சனாதேவிக்கு போக்குவரத்தினை சகோதரியாரின் உதவியுடன் மேற்கொள்ள ஈருறுளி ஒன்றினை ஜேர்மென் உதவும் இதயங்களின் அமைப்பினர் வழங்கியுள்ளனர்.

கணவரால் கைவிடப்பட்ட சகோதரியாரின் உதவியுடன் கிளிநொச்சிப் பகுதியில் வசித்துவரும் றஞ்சனாதேவி தமது வெளியக வேலைகளை மேற்கொள்வதற்காக சகோதரியாரின் உதவியுடனும்,வெள்ளைப்பிரம்பின் உதவியுடனும் நடையாக நடந்தே பெரும் சிரமங்களின் மத்தியில் நிறைவேற்றிவந்தனர்.

இவர்களுக்கு பயணத்தை இலகுபடுத்தும் நோக்குடன் ஜேர்மெனியில் உள்ள வரதராசன் தம்பதியினரின் புதல்வி சியான அவர்களின் முதலாவது பிறந்த தினத்தையிட்டு இவ் உதவியினை இவ் முன்னாள் போராளிக்கு வழங்கியுள்ளனர்.

இதனை உதவும் இதயங்களின் இலங்கைக்கான அமைப்பின் பிரதிநிதியும்,தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்,வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உதவித்தவிசாளருமாகிய எஸ்.சஜீவன் நேரடியாகச் சென்று வழங்கியுள்ளார்.




இவ்வாறாக போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்து வாழ்கின்ற உறவுகள் உதவிகளை வழங்கவேண்டும் ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் செயற்பாடானது வரவேற்கத்தக்கதும்; மகிழ்ச்சிகரமான செயற்பாடே! இவ்வாறான புலம்பெயர் உறவுகளின் உதவியானது துன்பபட்டுள்ள தாயக உறவுகளின் காயங்களுக்கு ஒரு ஆறுதலை வழங்கும் என்பது உண்மை.

பட உதவி எஸ்.செல்வதீபன்




« PREV
NEXT »

No comments