Latest News

July 24, 2015

நதியில் படகு விபத்து-18 பேர் பலி
by Unknown - 0

எகிப்தில் உள்ள நைல் நதியில் சரக்குக் கப்பலும் பயணிகள் படகும் மோதிக் கொண்டதில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒரு திருமண நிச்சயதார்த்த கொண்டாட்டத்திற்காக, இளம் ஜோடி ஒன்றின் குடும்பத்தினரும் நண்பர்களும் படகு ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தனர்.

கெய்ரோவுக்கு வடக்காக இந்தப் படகு சென்றுகொண்டிருந்தபோது, விபத்து நேரிட்டதாக இதைப் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

நான்கு குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்ச கம் தெரிவித்துள்ளது. பல பயணிகளை இன்னும் காணவில்லை.

விபத்து நடந்த இடத்தில் இருந்து ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட் டுள்ளன. சரக்குக் கப்பலின் கேப்டன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தங்கள் நிச்சயதார்த்தத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த இளம் ஜோடியும் இறந்துவிட்டார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ரமலான் மாதத்தின் முடிவை பலரும் நைல் நதியில் கொண்டாடுவதால், நதி யில் நெரிசல் அதிகமாக இருந்துவருகிறது.
« PREV
NEXT »

No comments