பிரித்தானியத் தலைநகர் லண்டனில் மக்களுடனான நேரடிச் சந்திப்பு ஒன்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார மைச்சர் திரு.மாணிக்கவாசகர் கலந்துகொள்ளவுள்ளார்.
இச் சந்திப்பு, வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள227, PRESTON ROAD, WEMBLY, HA9 8NFஎன்ற முகவரியில் உள்ள TGTE லண்டன் அலுவலக மண்டபத்தில் 26-06-2015 வெள்ளிக்கிழம்ஐ மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.
சுழன்றடிக்கும் சூறாவளியாய் உலக நாடுகள் எங்கணும் சென்று இலங்கையில் தமிழினத்திற்கு ஏற்பட்ட கொடூரங்களையும், பாரிய இனப்படுகொல்ஐயையும், மனித உரிமை மீறல்களையும் ஆதாரங்களோடு சமர்ப்பித்து தமிழர்களுக்கான நீதிக்கு அவர்களின் ஆதரவை பெற்று வருபவர்.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் சார்ந்த எந்த கூட்டமாக இருந்தாலும் பெரும்பாலான அமர்வுகளில் தானும் நேரடியாக சென்று கலந்து கொண்டு தமிழினத்தின் விடுதலைக்காகவும், அனீதி இழைக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதி கிடைப்பதற்காகவும் இரவு பகலாக ஓய்வின்றி செயற்பட்டுவரும் ஒரு செயல் வீரன்.
No comments
Post a Comment