தமிழீழ விடுதலையினை வென்றடைவதற்கான தந்திரோபாயங்களின் அடிப்படையில், சிறிலங்கா அரசுத்தலைவர் தேர்தலை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் விவாதித்தே தீர்மானம் எடுக்கப்படும் என செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவினை மையப்படுத்திய அனைவரது கவனமும் சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பில் குவிந்திருக்கும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இச்செய்திக்குறிப்பு வெளிவந்துள்ளது.
சிறிலங்கா அரச கட்டமைப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத் தாயகப் பகுதியில், கடந்த காலங்களில் சிறிலங்கா அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட தேர்தல்கள் தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தனது அரசவையிலேயே விவாதித்து தீர்மானங்களை எடுத்திருந்தது.
அந்நடைமுறையே இம்முறையும் சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பில் கையாளப்படும் எனவும் நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Buttons