Latest News

December 16, 2014

பாகிஸ்தானில் பள்ளிக்கூடத்தைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர் - குழந்தைகள் கொலை
by Unknown - 0

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பெஷாவர் நகரில் ராணுவத்தால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் ஒன்றை, தாலிபான் துப்பாக்கிதாரிகள் கைப்பற்றி, பள்ளிச் சிறார்களை பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள்.
உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை . ஆனால் மாகாண சுகாதார அமைச்சர் பிபிசியிடம் பேசுகையில் 21 குழந்தைகளும், ஒரு ஆசிரியரும் ஒரு பாதுகாவலரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றார்.
ஐந்து அல்லது ஆறு ஆயுததாரிகள் ராணுவ உடையில் பள்ளிக் காம்பவுண்டின் மீது ஏறி துப்பாக்கியால் சுட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினர். பாகிஸ்தான பாதுகாப்புப் படையினர் இந்த கட்டிடத்தைச் சுற்றி வளைத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சப்தங்களும், வெடிச்சத்தங்களும் கேட்டவண்ணம் இருக்கின்றன.இன்னும் உள்ளே சிக்கியிருக்கும் குழந்தைகளை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
பாகிஸ்தானப் பிரதமர் நவாஸ் ஷரிப் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார்.
« PREV
NEXT »