ஹைதராபாத்தில் தங்கி இருந்தபோது ஊடத்தினரை போனில் தொடர்பு கொண்டு சித்தி பாரதிதேவி மீதும் இயக்குனர் களஞ்சியம் மீதும் குற்றச்சாட்டுகளை கூறினார்.இருவரும் தன்னை சித்ரவதைபடுத்தியதாகவும் பணம் கொட்டும் ஏ.டி.எம். மெஷின்போல் பயன்படுத்தினர் என்றும் கூறினார்.
இதுவரை சம்பாதித்த கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்துக்களை பறித்துக் கொண்டதாகவும் புகார் கூறினார். என் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் ஐதராபாத் வந்து விட்டேன் என்றும் இனிமேல் சென்னைக்கு வரமாட்டேன் என்றும் தெரிவித்தார்.
சித்தியுடன் ஏற்பட்ட தகராறுக்கு பின்னர் நடிகை அஞ்சலி தனது சித்தப்பாவுடன் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். ஹோட்டலில் தங்கி அவர் படப்பிடிப்புக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் நேற்று காலையில் இருந்து அவரைக் காணவில்லை. அவரது சித்தப்பா வெளியே சென்றபோது அஞ்சலி மாயமாகியுள்ளார். அவரது கைபேசிக்கு அழைத்தாலும் சுவிட்ச் ஆப் என்று வருகிறது.
அஞ்சலி இந்தி படமான போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் அசின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்குத்தான் அவர் ஹைதராபாத்தில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் அவர் மாயமாகியுள்ளதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. போல்பச்சன் பட நாயகனான நடிகர் வெங்கடேஷ், படப்பிடிப்புக்கு வராததால் அஞ்சலி மீது புகார் தர உள்ளதாக கூறியுள்ளார்.
இது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments
Post a Comment