Latest News

May 06, 2020

பிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்!
by admin - 0

உலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம்.

வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயிர் இருப்பை துறந்து சக மனித உயிர்ப்பிற்காக களப்பணி ஆற்றிவரும் NHS பிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கு பெருமளவிலா உணவுப் பொருட்களை வழங்கி தமது அன்பை வெளிப்படுத்தியிருந்தார்கள் பிரித்தானியத் தமிழர்கள்.

பிரித்தானியா உட்பட பல நாடுகளில் தமிழ் இனம் சார்ந்த தமிழ் மருத்துவர்கள் பணியாற்றி வருவதை NHS கட்டமைப்பு மேன்மையாக பார்க்கின்ற இந்த வேளையில், NHS பணியாளர்களுக்கான உணவு வழங்கும் மனித நேய உதவிப் பணியை தமிழ் தேசிய மக்கள் சார்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு இன்று வழங்கி இருந்தது.

இது பற்றி எமக்கு கருத்தத் தெரிவித்த பிரித்தானிய தமிழ் ஒருங்கிளைப்புக் குழுவின் ஒரு உறுப்பினர்,

'1976ம் ஆண்டு மே மாதம் இதே தினத்தில்தான் தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு புதிய மாற்றம் உருவான நிகழ்வு நடைபெற்றிருந்தது. அதேபோன்று இந்த மே மாதம்தான் தமிழர்கள் ஆயிரக் கணக்கில், இலட்சக்கணக்கில் அவலத்தை சந்தித்த மாதம். இந்த குறிப்பிட்ட மாதத்தில், குறிப்பிட்ட தினத்தில் எங்களுடைய மக்கள் சார்பாக இந்த மனிதநேய உதவியைச் செய்வதில் பெருமை கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments