Latest News

January 10, 2019

பிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை!
by admin - 0

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க ராஜதந்திர போராட்டங்கள் தற்போது இடம்பெறுகின்றன.அந்த வகையில், ஈழ தமிழ் மக்கள் தொடர்பில் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து கையெழுத்து போராட்டம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.




இது வரையில் குறித்த மனுவிற்கு ஆதரவாக பலர் கையெழுத்திட்டுள்ளனர்.

எனினும், காத்திரமான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமாக இருந்தால் மேலும் பலர் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூறியுள்ளது.

இன்னும் 18 நாட்களில் 86,899 கையெழுத்து பதிவுகள் தேவையாகவுள்ள நிலையில், பிரித்தானியாவில் வாழும் ஈழ தமிழ் மக்கள் தமது பூரண ஆதரவை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உங்களின் கையெழுத்தை பதிவு செய்ய இங்கே அழுத்தவும்....

« PREV
NEXT »

No comments