Latest News

November 10, 2017

பல சோதனைகளுக்கு மத்தியிலும் தென்னிலங்கையில் சாதித்த வடமராட்சியின் மைந்தன்!!
by admin - 0

பல சோதனைகளுக்கு மத்தியிலும் தென்னிலங்கையில் சாதித்த வடமராட்சியின் மைந்தன்!!
பல சோதனைகளுக்கு மத்தியிலும் தென்னிலங்கையில் சாதித்த வடமராட்சியின் மைந்தன்!!

15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் யாழ். ஹாட்லி மாணவன் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.
ஹோமாகம மகிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் 2 ஆம் நாளானா நேற்று இந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.

இவர் தட்டெறிதல் போட்டியில் 53.23 மீற்றர் தூரம் எறிந்தே இந்த புதிய சாதனையை நிலைநாட்டினார். முன்னைய சாதனையைவிட இது 7 மீற்றர் அதிகமானதாகும்.

புதனன்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் (13.41 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இதேவேளை, கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப் போட்டிகளில் நேற்று பிற்பகல் 3.00 மணிவரை 14 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments