Latest News

May 05, 2017

தமிழர்களை அடக்க பாயும் புதிய பயங்கரவாத தடைச்சட்டம்
by admin - 0

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு மாற்­றீ­டாக கொண்­டு­வர தயாராகும் சட்­டத்தின் திருத்­தங்கள் மிகவும் மோச­மா­ன­தா­கவும் மக்­களின் அடிப்­படை சுதந்­தி­ரத்தை கூட பறிக்கும் வகை யில் அமைந்­துள்­ள­தாகவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் பார­ாளு­மன்ற உறுப்­பி­ன­  ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் குற்றம் சுமத்­  தினார். தற்­போது அமைச்­ச­ர­வையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள திருத்­தங்­கள் அர­சாங்கத்தால் உட­ன­டி­யாக மீள் பரி­சீ­லனை செய்­யப்­ப­ட­வேண்­டி­ய­துடன் அவ­ச­ர­மாக சீர்­தி­ருத்­தப்­பட வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார்.  

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் மாற்­றங்­களை கொண்­டு­வரும் வகை யில் அமைச்­ச­ர­வையில் முன்­வைக்­கப்  பட்­டுள்ள திருத்­தங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­  பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது; கடந்த காலங்­களில்  நடை­மு­றையில் இருந்த பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் திருத்­தப்­பட்டு புதிய சட்­ட­மூலம் கொண்­டு­வர அமைச்­ச­ர­வையில் திருத்­தங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் தற்­போது முன்­வைத்­துள்ள திருத்­த­மா­னது கடந்த காலத்தில் இருந்த பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை விடவும் மோச­மா­ன­தாக முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.
 பயங்­க­ர­வாத தடைச் சட்டம் திருத்­த­பட வேண்டும் என கடந்த ஆண்டு இறு­தியில் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்ட நிலையில் என்னால் மூன்று யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டன. குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூலம் கவ­னத்தில் கொள்­ளப்­படல், தடுப்புக் காவலில் வைக்­கப்­படும் கால எல்லை 2 மாதங்­க­ளாக குறைக்­கப்­படல், உட­ன­டி­யாக சட்­டத்­த­ரணி ஒரு­வரை ஏற்­பாடு செய்தல் உள்­ளிட்ட மூன்று யோச­னை­களை முன்­வைத்­துடன் நான்­கா­வ­தாக பயங்­க­ர­வாதம் என்­ப­தற்­கான வரை­வி­லக்­கணம் ஒன்­றையும் முன்­வைத்­தி­ருந்தோம். எம்­மிடம் அதற்­கான வரை­வி­லக்­கணம் ஒன்று வின­வப்­பட்ட நிலையில் ஐக்­கிய நாடுகள் சபையின் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாதம் என்­ப­தற்­கான வரை­வி­லக்­க­ணத்தை கொண்ட வகையில் நாம் யோசனை முன்­வைத்­தி­ருந்தோம்.  

எனினும் அமைச்­ச­ர­வையில் தற்­போது கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள திருத்­த­மா­னது ஆரம்­பத்தில் எம்­முடன் இணங்­கி­ய­தாக அமை­யாது மிகவும் மோச­மான ஒன்­றாக அமைந்­துள்­ளது. இதில் தடுப்புக் காவல் கால வரை­யறை மாத்­திரம் தெரி­வித்­த­தைப்­போல உள்ள நிலையில் ஏனைய இரண்டு பிர­தான யோச­னை­களும் மாற்­றப்­பட்டு மிகவும் மோச­மான வகையில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. அதேபோல் பயங்­க­ர­வாதம் என்ற பதத்தின் வரை­வி­லக்­கணம் மாற்­றப்­பட்டு இதில் உள்­ள­டக்­கப்­பட அவ­சி­ய­மற்ற அனைத்­தையும் இணைத்த வகையில் பயங்­க­ர­வாதம் என்­ப­தற்­கான வரை­வி­லக்­க­ணத்தை முன்­வைத்­துள்­ளனர். சாதா­ரண நபர்கள் கூட பயங்­க­ர­வாத வரை­வி­லக்­க­ணத்தில் வரக்­கூ­டிய வகையில் திருத்­து­மாறு அமைந்­துள்­ளது. பார­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழுவில் நாம் இந்த விட­யங்­களை முன்­வைத்­துள்ளோம். 
அதேபோல் அர­சாங்­கதின் இந்த செயற்­பாடு மிகவும் மோச­மான ஒன்­றாக அமைந்­துள்­ளது. அதேபோல் இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக மாற்றங்களை கொண்டுவர வேண்டும். தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல் அவசரமாக சீர்திருத்தப்பட வேண்டும். மக்களின் அடிப்படை உரிமையை கூட பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் இல்லாத வகையில் திருத்தங்கள் அமையக்கூடாது. என்பதை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். 
« PREV
NEXT »

No comments