Latest News

March 11, 2017

வடமராட்சியில் சுமந்திரன் மற்றும் அவரின் வால்பிடிகளுக்கு கடும் எதிர்ப்பு
by admin - 0

வடமராட்சியில் சுமந்திரன் மற்றும் அவரின் வால்பிடிகளுக்கு  கடும் எதிர்ப்பு
 
வடமராட்சியில் அண்மையில் சுமந்தின் ஏற்பாட்டில் தமிழரசு கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைக்க யாழ்மாவட்ட இளைஞர் தமிழரசு கட்சியின் இளைஞர் அணித்தலைவரும் வடமாகாண சபையின் உறுப்பினருமான ச - சுகிர்தன் ஒழுங்கமைப்பில் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு வடமராட்சி இறைஞர் அணித்தலைவர் ப -சுரேஷ் மற்றும் அக்கட்சியின் பழைய உறுப்பினர்களுக்கு அறிவிக்கமால் சுமந்திரனின் வால்பிடி சுகிர்தன் ஊடக உள்ளுராட்சி தேர்தலை மையப்படுத்தி புதியவர்களை  இணைத்துக்கொள்ளும் முயற்சியில் சுமந்திரன் தரப்பு ஈடுபட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் வடமராட்சி நீண்டகால உறுப்பினர்களுக்கு இது தொடர்பாக எந்த அறிவித்தல்களையும் விடுக்கப்படவில்லை என்று வடமராட்சி இளைஞர் அணித்தலைவர் ப -சுரேஷ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கடந்தகால தேர்தல்களில் வடமராட்சியில் நடைபெற்ற கட்சியின் அனைத்து கூட்டங்களையும் செயற்பாடுகளையும் தம்மூடாக செய்தபோதும் உள்ளுராட்சி தேர்தலை மையப்படுத்தி புதியவர்களை சுமந்திரன் தரப்புக்கு இணைக்கும் பணிக்காக வால்பிடி சுகிர்தன் ஊடாக  சுமந்திரன் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிகழ்வு பாடசாலை விளையாட்டுப்போட்டிகளுக்கு  தேடி தேடி செல்லும் சுகிர்தன் தன்னை ஒரு பெரிய அரசியல்வாதியாக விம்பத்தை அரசியல் அறிவு இல்லாத இளைஞர்களிடம் ஏற்பாடுத்தி சுமந்திரனுக்கு ஆதாரவாக செற்படுத்த முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனது சொந்த தொகுதிக்கு பலத்த இராணுவப்பாதுகாப்புடன் வந்து போர்கால சூழ்நிலை மக்கள் மத்தியில் விதைக்கும் சுமந்திரன் எதிர்வரும் நாட்களில் இவ்வாறு செயற்பட்டால் கடும் எதிர்ப்பை தெரிவிப்போம் என வடமராட்சி தமிழரசு கட்சியின் இளைஞர் அணித்தலைவர் ப -சுரேஷ் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments