Latest News

January 16, 2017

தமிழ்க் கொலையுடன் வுவுனியா பேரூந்து நிலையம்
by admin - 0

vavuniya  

வவுனியாவில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோக பூர்வமாகத்திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் தமிழ் எழுத்துப்பிழை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பெருமளவில் தமிழர்கள் வாழ்ந்துவரும் வவுனியா மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தினால் இவ்வாறான தமிழ் பிழைகள் இடம்பெற்றுள்ளமையானது வருந்தத்தக்கதென நிகழ்விற்கு வருகைதந்திருந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பேருந்து நிலையத்தில் உள்ளுர் (ளூ) சேவை என பொறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பேருந்து தரிப்பிடத்தின் வேலைகள் யாவும் பூர்த்தியாகி முடிந்தும் இதுவரை காலமும் திறந்து வைக்கப்படாமல் இழுபறி நிலை காணப்பட்ட போதிலும் இன்றைய தினம் திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments