Latest News

January 18, 2017

ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதல். தமிழரின் எழுச்சி.!!
by admin - 0


ஏறுதழுவுதல் தமிழரின் பாரம்பரியத்தின் வெளிப்பாடு. அது ஒரு வீர விளையாட்டு மட்டுமல்ல, எமது ஆரோக்கிய வாழ்வாதாரத்தின் சுழற்சியும் அதில் புதைந்துள்ளது. 
அதை மீட்டெடுப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையும் கூட.! 
இதைத் தமிழன் மீட்பதற்கும், பலம் கொண்டு எழுவதற்கும், தமிழராய் இணைவது மட்டுமே, ஒரே வழி.! 50 வருடங்களாக திராவிடர்களாகவே வாழ்ந்து, தமிழர் எந்த ஆதாயத்தையும் பெறவில்லை.! 



திராவிடமும், அதைச் சுற்றி வட்டமிடும் பணமுதலைகளும், பெருத்து கொளுத்தனவே அன்றி, தமிழர் இற்றைவரை ஒருபிடி சோற்றுக்கு போராடவேண்டியே உள்ளது.!
அந்த நிலை மாறவேண்டும்.! திராவிடனாய் உருமாறியுள்ள தமிழனும், தன்னிலை உணர்ந்து தமிழனாகவேண்டும்.!
இதுவரை திராவிட அரசுகள் தமிழனை, சாதிகளாகவும், சமயங்களாகவும் திட்டமிட்டு பிரித்தாண்டனர்/ஆளுகின்றனர்.! 
இன்று தமிழன் சிதைந்தழிந்து போகும் நிலையிலேயே இருக்கின்றான்.! 
இதிலிருந்து மீள்வதற்கு, இப்போது… தமிழருக்கு இருக்கும் ஒரே தெரிவு, எல்லோரும் “தமிழர் தேசியம்” என்ற ஒற்றைக்குடையின் கீழ் அணிதிரள்வதே ஒரே வழி.! 
இனியும் தமிழர்கள் திராவிடத்தின் பசப்பு வார்த்தைகளை நம்பி, பின் செல்வார்களானார், தமிழரின் இருப்பு அகற்றப்பட்டு, கலப்பு மரபாக்க தமிழ்நாடு உருமாற்றம் பெறும்.! 
இன்றைய மாணவர்களின் எழுச்சி, தமிழர் என்பதன் அடையாளத்துடன் பொங்கி எழுந்துள்ளது. இதை அணைப்பதற்கு (முத்துக்குமாரின் மரணத்தின் போது, மாணவர்களின் எழுச்சியை, திமுக அகற்றியது போல்) திராவிடக் கட்சிகள் முனையும். 
அது முடியாவிட்டால் உங்களுடன் சேர்வது போல் சேர்ந்து, தங்கள் ஊடக வலிமையால் தங்களை முன்னிறுத்தி தமிழனின் உணர்வுகளை, ஓட்டாக மாற்ற முயற்சிப்பார்கள்.! 
முன்னர் போல், அவர்களின் சதிகளுக்கு மாணவர்கள் ஆளாகக்கூடாது.! 
சாதி, மதம் மற்றும் பால் வேறுபாடு கடந்து, எப்படி தமிழராக ஒன்றினைந்தீர்களோ, அங்கேயே உங்கள் வெற்றி ஆரம்பித்து விட்டது.! 
திராவிடக் கட்சிகளின் சூழ்ச்சிவலைகளை அறுத்து, உங்கள் உரிமையை நிலை நாட்டுங்கள்.! 
நாங்களும், என்றும் உங்களோடு பயணிப்போம்.! 
“எங்கள் வரலாறுகள், உங்களை வழிநடத்தும்”.! 
இன்று நீங்கள்,எங்களுக்கு விதைத்த நம்பிக்கையை, அழிந்துபோக விடாதீர்கள்.!
உங்களில் ஒருவன்

-ஈழத்து துரோணர்
« PREV
NEXT »

No comments