Latest News

January 06, 2017

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 7ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.
by admin - 0

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 7ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.
 
2010 ஆம் ஆண்டு தை மாதம் 6 ம் திகதி மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார்.ஈழத்தமிழர்களின் ஒரே தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அவர்களை எம் தேசத்தின் விடிவுக்காய் தந்த எங்கள் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவு எம்மை மிக ஆழ்ந்த சோகத்தில் இட்டுசென்றது.

யுத்தம் முடிவுற்று பல மாதங்கள் ஆகியும் கடும் நோயின் காரணமாக தவித்த போது கூட அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சிங்கள கொடூர அரசு அவரை அவ் முகாமை விட்டு செல்ல அனுமதிக்காமல் தனது கோர முகத்தை காட்டி நின்றது.வார்த்தைக்கு வார்த்தை மனித உரிமையை உச்சரிக்கும் வல்லரசு நாடுகளும் சர்வதேச நாடுகள் அதை கண்டும் காணாமல் மௌனம் சாதித்தது.உண்மையிலே உலக நாடுகள் சுயநலம் அற்று நேர்த்தியாக செயல்பட்டிருந்தால் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் மட்டும் அல்ல எத்தைனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருந்திருக்கலாம்.

எம் தேசத்துக்காகவும் எம் இனம் வாழவும் எத்தனை எம் உயிருக்கும் மேலான உயிர்கள் தம் உயிரை அர்ப்பணித்தார்கள். இவர்கள் எம் இனம் வாழ தியாகம் செய்தவர்கள் அல்லவா.... எம் உறவுகளுக்காய் உயிர் கொடுத்தவர்கள் அல்லவா....இவ் மாவீரர்களையும் மக்களையும் நாம் எப்படி மறக்க முடியும்?......இல்லை மறக்க முடியாது. கடைசி தமிழன் ஒருவனாக இவ்வுலகில் நாம் வாழ்ந்தாலும் நாம் மறவோம். ஒரு நாளும் எம் தேசத்தின் மூச்சுக்களை!!!

ஆம் அன்பான தமிழ்ஈழ உறவுகளே! நாம் அனைவரும் எப்பொழுதும் எமக்காக தம் உயிரை அர்ப்பணித்து தமிழ் ஈழ கனவுடன் கல்லறைக்குள் கண்மூடி விழித்திருக்கும் எம் தேச வீரர்களையும், நாட்டுபற்றார்களையும், மக்களையும் நினைவுகூருவோம்.
ஒரு குடும்பத்துக்காக வாழ்ந்து தம் உயிரை காலத்தின் கோலத்தால் அர்பணித்த எம் பெற்றோர்களை பிள்ளைகளை நாம் உயிர்வாழும் வரைக்கும் எப்படி மறக்காமல் வருடாந்தம் நினைவு கூறுகிறோமோ அதைவிட எம் தேச விடுதலைக்காய் மக்களுக்காய் தம் உயிரை அர்ப்பணித்தவர்களை நாம் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.ஆக குறைந்தது எமது நேரத்தையாவது அர்ப்பணித்து அஞ்சலி செலுத்துவோம் என இந்நாளில் உறுதி எடுப்போமாக.
-ஈழம் ரஞ்சன்- 

கையெடுத்து வணங்கும் எங்கள்...மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் நினைவான பாடல்-






நன்றி ஈழம்ரஞ்சன்

« PREV
NEXT »

No comments