சீமான் மீது வழக்கு….
அது முடிந்து போய்விடும்…
ஒரு வேளை தண்டனை எதாவது கிடைத்தால்
அதுவும் தீர்ந்து போய்விடும்….
சீமான் மரணத்தோடு
அவர் வாழ்வும் முடிந்து போய்விடும்!
ஆனால்,
அறிவு மறுக்கப்பட்டு, பாமரனாய், அடிமைகளாய், துன்பச்சேற்றில் உழல்கிற மக்கள் தொகுதியை நோக்கி விடுதலைக்கான பாதையை சுட்டிக்காட்டிப் பேசுகிற சமகால கலகக்காரன் ஒருவனின் சீற்றமிகு போர்ப்பரணியாய் ஒலித்திருக்கிற அந்தப் பேச்சு லட்சம் ஆண்டுகள் ஆனாலும் வாழும்….
இன்னும் 100 தலைமுறை கடந்து பிறக்கும் தமிழ் பிள்ளைக்கும் தான் யார் என்பதைச் சொல்லும்!
தன் முன்னோர்கள் எப்படியெல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்…. அவர்களை அடிமை செய்தவன் யார்….
அவர்களை அடிமை செய்ய அவன் பயன்படுத்திய கருவி எது என்பதையெல்லாம் ஒரு பல்கலைக்கழகம் போல் நின்று இந்தப் பேச்சு சொல்லிக்கொடுக்கும்!
ஆயிரம் வழக்குகள் போடலாம்…. மேடைகள் போட்டு ஒப்பாரி வைக்கலாம்…. உங்கள் அதிகார பலம் கொண்டு அவனைக் கொன்று கூட போடலாம்…. ஆனால், அந்தக் கலகக்காரனின் நேர்மையான சிந்தனையிலிருந்து உதித்த கேள்விகளுக்கு ஒருகாலும் உங்களால் விடை சொல்ல முடியாது!
– கல்யாண சுந்தரம்
No comments
Post a Comment