Latest News

December 20, 2016

இரண்டு இட்லி கூட கிடைக்காமல்..! பட்டினியோடு இறந்த சூப்பர் காமெடி நடிகர்..!!
by admin - 0

எம்.ஜி.ஆர் காலத்தில் அந்த ஒல்லிப் பையன் சென்னைப் பாஷையோடு வாய்ப்புத் தேடி அலைந்தான்.

பல கம்பெனிகள் ஏறி இறங்கியதில் சின்ன சின்ன கேரக்டர்கள் ஓரிரு காட்சிகள் மட்டுமே நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.

சென்னை புறநகரில் ஓலைக் குடிசையில் தான் வாழ்க்கை.. பஸ் பயணம் ஸ்டூடியோவில் சூட்டிங்.. மீண்டும் இரவு நடந்தே தனது வீடு போய் சேருவான்.

1980களில் மெல்ல மெல்ல வெளியே தெரிய ஆரம்பித்தார். காரணம் வித்தியாசமான தோற்றம், சென்னைப் பாஷை..! எஸ் அவர் தான் லூஸ்மோகன்.

ஆர்.சுந்தர்ராஜன் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். ராமநாராயணன் ரெகுலராக வாய்ப்பு கொடுத்தார்.

சூரக்கோட்டை சிங்க குட்டி படம் இவரை தனித்து அடையாளம் காட்ட லூஸ்மோகன் காலம் உருவானது.

இவர் இல்லாத படங்களே இல்லை.. தனி பாடல் காட்சியே வைத்தார்கள். “கண்ணுன்னா கண்ணு எம்மாம் பெரிய கண்ணு” என்றொரு பாடல் இவரை மேலும் உயர்த்தியது.

1990 முதல் 1999 வரை லூஸ்மோகன் காட்டில் அடைமழை பணமும், புகழும் குவிந்தது. ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளைகள் இருந்தார்கள்.

வீடு வாங்கினார், கார் வாங்கினார். ஆசை ஆசையாய் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

இவர் செய்த மிகப் பெரிய தவறு தனக்கென்று எதுவும் சேர்த்து வைக்காமல் பிள்ளைகள் பெயரில் சொத்துக்கள் வாங்கினார்.

லூஸ்மோகனுக்கு வயதானது. படவாய்ப்புகள் குறைந்தது. வீட்டில் முடங்கிப் போனார். பிள்ளைகளும் ஒரு வாய் சோறு போடவில்லை.

பசி, பட்டினி.. மூப்பு நோயோடு போராடியவர். எனக்கு தினமும் இரண்டு இட்லி கொடுங்கள் என்றார்.

அதுகூட போடவில்லை. பார்த்தார். போலீஸ் கமிஷனர் ஆபீஸ் போனார். பிள்ளைகள் மீது புகார் கொடுத்தார். பெரிய பரபரப்பானது.
« PREV
NEXT »

No comments