Latest News

October 01, 2016

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் உறவுகளே...!!!
by admin - 0

 

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் உறவுகளே...!!!

எங்கள் தமிழின மக்களை இப்போதும் மலையகத்தில்

அடிமையாக்கி அவர்களின் உழைப்பைச் சுரண்டி

உல்லாசம் அனுபவிக்கிறார்கள் இரக்கமற்றவர்கள்...

 

அப்போதுதான் ஆழப் புதைந்த அப்பனின்

சிதை மேல் என்று பாடினோம்

இப்போதுமா இந்த இழி நிலை அவர்களுக்கு???

எப்போது மாறும் இந்த அடிமை நிலை???

 

தேயிலைத் தோட்டங்களில் கொழுந்தைக் கொய்து

வேலை செய்யும் போது கொட்டும் குளவிக்கும்

இரத்தம் உறிஞ்சும் அட்டைக்கும் கடிக்கும் பாம்புக்கும்

மட்டும்தானா இவர்கள் துன்பம் தெரியும்???

இதுநாள் வரை உங்களுக்குத் தெரியவில்லையா???

 

இவர்கள் என்ன கேட்டார்கள்...???

மாடமாளிகையும் சுவர்க்க லோக வாழ்க்கையுமா கேட்டார்கள்???

தாம் செய்த வேலைக்கான கூலியைத்தானே கேட்டார்கள்!!!

வேலையை வாங்கிக் கூலியைக் கொடுக்க மறுப்பது

கொள்ளையா!!! களவா!!! அல்லது கொடுமையா!!!

 

உடலை வருத்தி உயிரை உருக்கி - இவர்கள்

உழைப்பால் கிடைக்கும் பானத்தை - இன்று

உலகமே உறிஞ்சிக் குடித்து

உற்சாக பானம் என விளம்புகின்றது - ஆனால்

இவர்கள் உழைப்பை மட்டும் மதிக்கவில்லை மிதிக்கின்றது!!!

உலகெல்லாம் உரிமை முழக்கம் - அதிலும்

உழைப்பாளர் உரிமை கட்டுக்கட்டாய் காகிதத்தில்

உழைப்பாளர்க்கு உதவாத உரிமை எதற்கு???

ஓ... உழைப்பாளர் உரிமை என்ற பகுதிக்குள்

இவர்கள் உள்ளடக்கப்படவில்லையா???

 

தொழிலாளர் உழைப்பைச் சுரண்டி

தொழிலாளர் தினம் கொண்டாடி மகிழுந்தவர்கள்

தொழிலாளி உரிமை என்றால்....

தொல்லை நமக்கேது என்று பதுங்கிவிடுகின்றார்களாம்!!!

 

இன்றைய இந்த உலகம்....

மனித உரிமை என்றது! சிறுவர் உரிமை என்றது!

பெண்கள் உரிமை என்றது! தொழிலாளர் உரிமை என்றது!

இன்னுமின்னும் ஏதேதோ உரிமைகள் என்று கூறி முழக்கமிட்டது

ஆனாலும் இந்த இலங்கை நாட்டின் மலையகத்தில்

தோட்டங்களில் பாடுபட்டு வேலை செய்யும் - இந்தப்

பெண் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டப்படுவது பற்றி

எந்த உரிமைகளும் கண்டு கொள்வதில்லையே

ஏன்...??? ஏன்...??? ஏன்...???

 

இந்த மனிதர்கள் இப்போதும் எப்போதும்

உரிமை அற்ற மனிதர்களா???

அல்லது மனிதர்கள் அல்ல என்றா கருதுகின்றார்கள்

அதனால்தானா இப்படி நோக்கப்படுகின்றார்கள்!!!

 

எங்கு வாழ்ந்தாலும் இவர்கள் எங்கள் தமிழ் இனம்

இவர்கள் எங்கள் உறவுகள் இவர்களுக்கு

இப்படியான உரிமை அற்ற இழி நிலை இனியும்

இப்படியே தொடர வேண்டுமா...????????????

இதற்கெதிராய் இப்போதே குரல் கொடுத்து

இவர்கள் உழைப்பைச் சுரண்டி ஏமற்றும்

அடிமை விலங்கினை உடைந்தெறிய

ஒன்றுபடு தமிழா...!!!


-சிவேந்தன்-


« PREV
NEXT »

No comments