Latest News

October 02, 2016

கேமராவைப் பயன்படுத்தி ATM இயந்திரத்தில் பணம் கொள்ளையடித்த இலங்கைத் தமிழர்கள் பிரித்தானியாவில் கைது
by admin - 0

கேமராவைப் பயன்படுத்தி ATM இயந்திரத்தில் பணம் கொள்ளையடித்த இலங்கைத் தமிழர்கள்

 

லண்டன் புற நகர்ப் பகுதியான ரூட்டிங்கில் சில தமிழ் இளைஞர்கள் வேற்று நாட்டவர்கள் துணையோடு போலியான அட்டைகளை தயாரித்து அதனூடாக ஏ.ரி.எம் மெஷினில் காசை களவாடி வந்துள்ளார்கள். இவர்கள் நீண்ட காலமாக இயங்கிவந்துள்ள நிலையில். இவர்களை பிடிக்க லண்டன் மெற்றோ பொலிடன் பொலிசார் ரகசிய நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளார். இதனை அடுத்து , அவர்கள் மேற்கொண்ட தேடுதலில் மூவர் தற்போது சட்டன் என்னும் இடத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும். CCTV கமராக்கள் உதவியோடு தாம் அவர்களை கைதுசெய்ததாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

நடராஜா நந்தகுமார், கிஷோக் தவராஜா, ஜகமித்ரா விஸ்வநாதன் ஆகிய இலங்கைத் தமிழர்கள் பிரித்தானியாவில் Sutton என்னும் இடத்தில் உள்ள ATM இயந்திரத்தில் மக்களின் தனிப்பட்ட வங்கி அட்டை விவரங்கள் பெற  ipod கேமராவைப் பயன்படுத்தி நூதனமுறையில் ஆயிரக்கணக்கான பவுன்டுகளை கொள்ளையடித்ததாக பிரித்தானிய காவல்த்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளனர். 

இரண்டு மணி நேரத்திற்குள் £4,400 பவுண்டுகள் திருடியது கையும் களவுமாக CCTV கேமரா பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
« PREV
NEXT »

No comments