தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தம்மை அறைந்ததாக அக்கட்சியின் எம்பியான சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் புகார் கூறியிருந்தார். இதனால் அவரை உடனடியாக அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கியும் உத்தரவிட்டிருந்தார்.
ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா பேசிய முழுமையான பேச்சு விவரம்: இரு விஷயங்களை பேச விரும்பிகிறேன். கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இரு எம்.பிக்கள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் பற்றி பேச விரும்புகிறேன். திருச்சி சிவாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திருச்சி சிவா மிகவும் நேர்மையானவர். என் கட்சித் தலைவர் பற்றி, அவர் பேசியதற்காக, உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்துவிட்டேன் . திருச்சி சிவாவிடமும், திமுக தலைவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. நான் என் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய என் தலைவரால் நிர்பந்திக்கப்படுகிறேன். ஆனால் எனக்கு அவர் மீது நன்மதிப்பு இருக்கிறது. இந்த பதவியை எனக்கு கொடுத்தற்கு, நான் மிகவும் நன்றி உணர்வோடு இருப்பேன். என்னை இந்தப் பதவியில் இருந்து விலக வற்புறுத்துகிறார்கள். நான் என் பதவியில் இருந்து விலகமாட்டேன். இந்த நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எங்கு இருக்கிறது. இங்கே பேசாமல் எங்கே பேசப்போகிறேன். என்னை அவமானப்படுத்தினார்கள். நேற்று, என் தலைவர் என்னை அறைந்தார். என்னை இங்கு தம்பிதுரை தான் அழைத்துவந்தார். என் குடும்பத்தினரிடம் கூட பேச என்னை அனுமதிக்கவில்லை. ஒரு தலைவர் ஒரு எம்.பி யை அறைவது என்ன விதத்தில் சரி. பெண்களின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது. தமிழ்நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை. என்னால், என் வீட்டில்கூட வாழமுடியவில்லை.
அடிதடிக்கு முன்பே... "மப்பு ஆடியோ" மூலம் பரபரப்பைக் கிளப்பிய சசிகலா புஷ்பா!
அதிமுகவில் எந்த அளவிற்கு வேகமாக வளர்ந்தாரோ அதே அளவிற்கு கீழே இறங்கினார். மகளிரணி மாநில செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். கடந்த மார்ச் மாதம் சசிகலா புஷ்பா தனது ஆண் நண்பருடன் போனில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது அந்த ஆடியோ பேச்சு இதோ:
No comments
Post a Comment