Latest News

August 22, 2016

முன்னாள் போராளிகளே……..! கலங்காதீர்கள்.!!
by admin - 0

தற்போது சில நாட்களாக சில ஊடகங்களிலும் முகநூல்களிலும் சில காணொளிகளை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. 

அதில், பல போராளிகள் மிகவும் கவலையுடனும் மன விரக்தியுடனும் தங்களை சமுதாயம் புறக்கணித்து மூன்றாம் தர மனிதர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் நோக்குவதாகக் கூறியிருக்கின்றனர்.

எம்மைக் காத்த எம் காவல் தெய்வங்களே, நீங்கள் ஒருபோதும் அவ்வாறாக நினைக்க வேண்டாம். மனச்சாட்சியற்ற ஒரு சிலர் உங்களை அவ்வாறு புறக்கணிப்பதால் தமிழர்கள் அனைவரும் உங்களைப் புறக்கணித்ததாகக் கருதவேண்டாம்.

எமக்கு உயிர் தந்து எம்மை மகிழ்வுடன் வாழவைத்தது நீங்கள்தான். நீங்கள் ஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் தமிழன் என்ற ஒரு இனத்தை இலங்கையிலிருந்து இல்லாதழித்திருப்பார்கள் சிங்களக் காடையர்கள்.!!

போராளிகளே… தளபதிகளே… மாவீரர்களே… நீங்கள் போராடியதால்தான் எம் தலைமுறை இன்றுவரையும் தலை நிமிர்ந்திருக்கிறது. எப்போதும் உங்கள்மேல் உள்ள மரியாதை, நம்பிக்கை என்றும் எம் மனங்களில் இருந்து நீங்காது. எவரும் நீக்கவும் முடியாது!

இப்போது நீங்கள் தனிமையில் இல்லை நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம்தான் இருப்போம். 

சிங்களக் காடையர்களிடமிருந்து கோழி தன் குஞ்சுகளை காப்பது போல் நீங்கள் எம்மை காத்தீர்கள். எப்படி உங்களை நாம் மறப்போம்?? எப்படி உங்களை நாம் புறக்கணிப்போம்??

ஈழதேசம் என்ற கோவில் கட்டிய தூண்கள் நீங்கள்தானே… எம்மை வாழ வைத்த தெய்வங்களே உங்களை முன்னாள் போராளிகள் என்று சொல்லும் வார்த்தைகள் கூட இன்னும் சில காலங்களுக்குத்தான். 

இனி எப்போதும் எங்கள் தளபதிகள் நீங்களே… உங்களோடு நாமும் சேர்ந்து போராடத் தயாராக உள்ளோம்… நாங்கள் உங்கள் போராளிகளே இதில் ஒரு சின்னத் துளிகூட ஒருபோதும் மாறாது!! எம் மனங்களில் இருப்பதைத்தான் சொல்கின்றோம்…….!

நன்றி. 

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

– யாழ்காந் தமிழீழம்

« PREV
NEXT »

No comments