மத்திய லண்டன் பகுதியில் நடந்த கத்திக் குத்து சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார், ஐந்து பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக லண்டன் போலிசார் 19 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்தனர்.
மத்திய லண்டன் பகுதியில் உள்ள ரஸ்ஸல் சதுக்கத்தில் இந்த சம்பவம் நடந்தது. அவரை டேசரைப் பயன்படுத்தி போலிசார் கைது செய்தனர்.
அவருக்கு மனநலப்பிரச்சனைகள் இருக்கலாம் என்று ஆரம்ப கட்ட அறிகுறிகள் காணப்படுவதாகக் கூறிய போலிசார் ஆனாலும் பயங்கரவாதச் செயலா என்பது குறித்தும் விசாரணை நடத்திவருவதாகத் தெரிவித்தனர்.
லண்டன் வீதிகளில் போலிசாரின் பிரசன்னம் அதிகப்படுத்தப்படும் என்று போலிஸ் துறைக்காகப் பேசிய அதிகாரி ஒருவர் கூறினார்.
No comments
Post a Comment