கனடா நாட்டில் வசித்து வருபவர்கள், ஈழத்தைச் சேர்ந்த கார்த்திக், மீரா ஆகியோர். இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். தீவிர தமிழ் ஆர்வலர்களான இவர்கள், தங்கள் திருமணத்தில் தமிழ் பற்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
திருமணத்தன்று, திருவள்ளுவர், தேசியத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் உருவம் பொறித்த தங்கத்தாலியை, மணமகள் மீரா கழுத்தில் மணமகன் கார்த்திக் கட்டினார். தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிலை முன் நின்று திருமண உறுதிமொழியும் எடுத்தனர்.
இப்போது, உலகத் தமிழர்களின் மத்தியில் வைரலாக இவர்களது திருமணச் செய்தி பரவி வருகிறது.
No comments
Post a Comment