Latest News

August 08, 2016

போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கான உதவி
by admin - 0



தமிழ் தேசிய செயற்பாட்டு குழு  தாயகத்தில் (வடக்கு கிழக்கில்) போரினால் பாதிக்கப்பட்ட , வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள , மற்றும் தாய்தந்தையை இழந்த மாணவர்களுக்கு  கல்விக்கான உதவியை மாதம் மாதம் வழங்கி வருகின்றது. 

அந்த வகையில் 01.08.2016 இன்று நடைபெற்ற வவுனியா வடக்கு ஓமந்தை கோட்ட முன் பள்ளிகளுக்கான விளையாட்டு விழாவிற்கு பிரித்தானியா தமிழ் தேசிய செயற்பாட்டு குழுவினால் 12000.00  பெறுமதியான கற்றல் ஊக்கிகள் பரிசில்களாக வழங்குவதற்காக வவுனியா வடக்கு முன் பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.ராஜேஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

 நிகழ்வில் கலந்து கொண்ட முன்பள்ளி உதவிக் கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.இராஜேஸ்வரன் அவர்கள் உரையாற்றும் போது இந்த விளையாட்டு நிகழ்வை நடத்துவதா அல்லது விடுவதா என சிந்தித்து கொண்டு இருந்த போது தமிழ் தேசிய செயற்பாட்டு குழு சரியான தருணத்தில் உதவி செய்து இந்த விளையாட்டு நிகழ்வை சிறப்பாக நடாத்த உதவி யுள்ளார்கள் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்றார். தமிழ் தேசிய  செயற்பாட்டு குழு வின் பணி தொடரும்....

இல்லாத இதயங்களின் கல்லாமை நீங்கிட 
கனிவோடு உதவுங்கள் கல்வியை பெற்றிட !
« PREV
NEXT »

No comments