Latest News

July 16, 2016

யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள தமிழ் மாணவர்கள் மோதல் -போர்களம்போல் காட்சியளிக்கும் பல்கலைக்கழகம்
by admin - 0

யாழ்.பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட விஞ்ஞானபீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றவேளையிலேயே இம் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமைபோன்று குறித்த நிகழ்வில் தமிழ்கலாசார முறைப்படி மேளதாள வாத்தியங்களோடு மாணவர்களின் வரவேற்கு நிகழ்வு இடம்பெறுவதாகவும் இம்முறை வழமைக்கு மாறாக கண்டிய நடனத்துடன் குறித்த நிகழ்வு ஆரம்பமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கண்டிய நடனமே இம் மோதல் நிலைமைக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



இதனால் குறித்த நிகழ்வும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக வளாகம் யுத்தக்களம் போல் காட்சியளிப்பதாகவும் தமிழ், சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கம்பி மற்றும் பொல்லுகளுடன் நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது மோதல் நிலைமை மிகவும் உக்கிரமடைந்துள்ளதாகவும் கலகமடக்கும் பொலிஸார் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்று செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியளார்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து பலவந்தமாக வெளியேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

« PREV
NEXT »

No comments